மக்களே உஷாராகுங்க.. தமிழ்நாட்டில் இன்று முதல்.. அடுத்த 3 தினங்களுக்கு வெயில் அதிகரிக்குமாம்..!

Mar 07, 2025,07:49 PM IST

சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை  3 டிகிரி வரை உயரக்கூடும் எனவும், வட தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் 4 டிகிரி வரை உயரக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதேபோல் வரும் மார்ச் 11ஆம் தேதி ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று மட்டும் ஏழு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 102.56 பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அதே போல் கரூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை, திருப்பத்தூர், வேலூர், ஆகிய இடங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட்டும்,சேலம் மற்றும் திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.



இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி , தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். குறிப்பாக வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும். சென்னையில் அதிகபட்சமாக நாளை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

11ஆம் தேதி கனமழை:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் மார்ச் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மிதமான மழை: 

தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்