சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த வான்வெளி சாகச நிகழ்ச்சியைக் கண்டு களித்த லட்சக்கணக்கான மக்களும் தற்போது வீடு திரும்பி வருவதால் ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கித் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று விமானப்படை சார்பில் வான்வெளி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. முற்பகல் 11 மணியிலிருந்து 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் மெரீனா கடற்கரையில் குழுமி கண்டு மகிழ்ந்தனர். மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில், எம்ஆர்டிஎஸ், மெட்ரோ மற்றும் பஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது போதவில்லை.

குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எம்ஆர்டிஎஸ் எனப்படும் மாடி ரயில்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. இதையடுத்து தற்போது மெட்ரோ சேவையானது 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற அளவில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை மற்றும் ஏஜி டிஎம்எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. அதேபோல விம்கோநகர் - ஏர்போர்ட் மெட்ரோ இடையே 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்டிரல் மெட்ரோ - புனித தாமஸ் மலை இடையிலான சேவை வழக்கம் போல 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது. கூட்ட நெரிசல் நிலவும் வரையில் இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}