சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த வான்வெளி சாகச நிகழ்ச்சியைக் கண்டு களித்த லட்சக்கணக்கான மக்களும் தற்போது வீடு திரும்பி வருவதால் ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கித் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று விமானப்படை சார்பில் வான்வெளி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. முற்பகல் 11 மணியிலிருந்து 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் மெரீனா கடற்கரையில் குழுமி கண்டு மகிழ்ந்தனர். மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில், எம்ஆர்டிஎஸ், மெட்ரோ மற்றும் பஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது போதவில்லை.
குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எம்ஆர்டிஎஸ் எனப்படும் மாடி ரயில்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. இதையடுத்து தற்போது மெட்ரோ சேவையானது 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற அளவில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை மற்றும் ஏஜி டிஎம்எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. அதேபோல விம்கோநகர் - ஏர்போர்ட் மெட்ரோ இடையே 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்டிரல் மெட்ரோ - புனித தாமஸ் மலை இடையிலான சேவை வழக்கம் போல 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது. கூட்ட நெரிசல் நிலவும் வரையில் இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}