சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த வான்வெளி சாகச நிகழ்ச்சியைக் கண்டு களித்த லட்சக்கணக்கான மக்களும் தற்போது வீடு திரும்பி வருவதால் ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கித் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று விமானப்படை சார்பில் வான்வெளி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. முற்பகல் 11 மணியிலிருந்து 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் மெரீனா கடற்கரையில் குழுமி கண்டு மகிழ்ந்தனர். மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில், எம்ஆர்டிஎஸ், மெட்ரோ மற்றும் பஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது போதவில்லை.

குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எம்ஆர்டிஎஸ் எனப்படும் மாடி ரயில்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. இதையடுத்து தற்போது மெட்ரோ சேவையானது 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற அளவில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை மற்றும் ஏஜி டிஎம்எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. அதேபோல விம்கோநகர் - ஏர்போர்ட் மெட்ரோ இடையே 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்டிரல் மெட்ரோ - புனித தாமஸ் மலை இடையிலான சேவை வழக்கம் போல 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது. கூட்ட நெரிசல் நிலவும் வரையில் இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}