பயணிகளின் கவனத்திற்கு.. மேலும் 66 தாழ்தள பேருந்துகள் வந்தாச்சு.. ஜஸ்ட் என்ஜாய் மக்களே!

Sep 27, 2024,04:26 PM IST

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்கனவே 58 தாழ்தளப் பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோரின் நலனுக்காகவே இந்த தாழ்தளப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எளிதாக ஏறி இறங்கும் வகையில் இந்தப் பேருந்துகளில் படிகள் உள்ளதால் வயதானவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இது உபயோகமாக உள்ளது. இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தாழ்தளப் பேருந்துகள் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. பழையப் பேருந்துகளுக்குப் பதில் புதிய பேருந்துகளை வாங்கி மாநகரப் போக்குவரத்துக் கழகம் புழக்கத்தில் விட்டுள்ளது.



முதல் கட்டமாக 58 தாழ்தளப் பேருந்துகள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது கூடுதலாக 66 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய தாழ்தளப் பேருந்துகள் எந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன என்ற விவரத்தையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி அதிகபட்சமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் டூ பிராட்வே ரூட்டில் 10 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அம்பத்தூர் எஸ்டேட் - வேளச்சேரிக்கு 5, தாம்பரம் - செங்குன்றம் 5,  டோல்கேட் - திருவான்மியூர் 8, திருவொற்றியூர் - பூந்தமல்லி 2, கோயம்பேடு பஸ் நிலையம் - கிளாம்பாக்கம் 9, கோயம்பேடு பஸ் நிலையம் - அண்ணா சதுக்கம் 5, தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் 5, தாம்பரம் - மாமல்லபுரம் 5, வடபழனி - கூடுவாஞ்சேரி 6, பிராட்வே - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 6 என பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் இந்த தாழ்தளப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காகவே தனியாக ரேம்ப் வசதி உள்ளது. வீல் சேரில் வருபவர்கள் இதன் மூலமாக ஈஸியாக பஸ்சுக்குள் ஏற முடியும். பஸ்சிலிருந்து இறங்கவும் முடிவதால் இதுபோன்ற மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும் இந்த பேருந்து மிகவும் வசதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்