பயணிகளின் கவனத்திற்கு.. மேலும் 66 தாழ்தள பேருந்துகள் வந்தாச்சு.. ஜஸ்ட் என்ஜாய் மக்களே!

Sep 27, 2024,04:26 PM IST

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்கனவே 58 தாழ்தளப் பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோரின் நலனுக்காகவே இந்த தாழ்தளப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எளிதாக ஏறி இறங்கும் வகையில் இந்தப் பேருந்துகளில் படிகள் உள்ளதால் வயதானவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இது உபயோகமாக உள்ளது. இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தாழ்தளப் பேருந்துகள் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. பழையப் பேருந்துகளுக்குப் பதில் புதிய பேருந்துகளை வாங்கி மாநகரப் போக்குவரத்துக் கழகம் புழக்கத்தில் விட்டுள்ளது.



முதல் கட்டமாக 58 தாழ்தளப் பேருந்துகள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது கூடுதலாக 66 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய தாழ்தளப் பேருந்துகள் எந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன என்ற விவரத்தையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி அதிகபட்சமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் டூ பிராட்வே ரூட்டில் 10 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அம்பத்தூர் எஸ்டேட் - வேளச்சேரிக்கு 5, தாம்பரம் - செங்குன்றம் 5,  டோல்கேட் - திருவான்மியூர் 8, திருவொற்றியூர் - பூந்தமல்லி 2, கோயம்பேடு பஸ் நிலையம் - கிளாம்பாக்கம் 9, கோயம்பேடு பஸ் நிலையம் - அண்ணா சதுக்கம் 5, தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் 5, தாம்பரம் - மாமல்லபுரம் 5, வடபழனி - கூடுவாஞ்சேரி 6, பிராட்வே - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 6 என பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் இந்த தாழ்தளப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காகவே தனியாக ரேம்ப் வசதி உள்ளது. வீல் சேரில் வருபவர்கள் இதன் மூலமாக ஈஸியாக பஸ்சுக்குள் ஏற முடியும். பஸ்சிலிருந்து இறங்கவும் முடிவதால் இதுபோன்ற மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும் இந்த பேருந்து மிகவும் வசதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்