"வெஜிட்டேரியன் பகுதி"க்கு வீடு மாறணும்.. போலீஸுக்கு வந்த மூதாட்டி.. களத்தில் இறங்க காவல்துறை!

Aug 18, 2023,10:04 AM IST
சென்னை: தான் அசைவம் சாப்பிடுவோர் அதிகம் வசிக்கும் பகுதியில் கடந்த 10 வருடமாக வசித்து வருவதாகவும், அது தனக்கு மிகவும் அசவகரியமாக இருப்பதாகவும், தன்னை சைவம் சாப்பிடுவோர் வசிக்கும் பகுதிக்கு இடம் மாற்ற உதவுமாறு ஒரு மூதாட்டி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்திருந்தார். அவரது கோரிக்கையை நிறைவேற்ற தற்போது போலீஸார் களம் இறங்கியுள்ளனர்.

சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அனுசுயா என்ற 85 வயது மூதாட்டி சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், தனது மகன் 10 வருடங்களுக்கு முன்பு தன்னை விட்டு பிரிந்து விட்டார். நான் இப்போது திருவல்லிக்கேணியில் தனியாக வசித்து வருகிறேன். மிகவும் சிரமமாக இருக்கிறது. மேலும் நான் சைவம், ஆனால் நான் வசிக்கும் பகுதியோ அசைவம் சாப்பிடுவோர் அதிகம் வசிக்கும் பகுதி. இதனால் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.



எனது மகனைக் கண்டுபிடித்துத் தர வேண்டும். அதேபோல எனக்கு சைவம் சாப்பிடுவோர் வசிக்கும் பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு பார்த்துத் தர வேண்டும். எனக்கு ஆதரவற்றோர் முகாமில் வசிக்க விருப்பமில்லை. நானே சமைத்து சாப்பிடுவதையே விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவரை ஆட்டோவில் பத்திரமாக வழியனுப்பி வைக்க உத்தரவிட்ட போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இதுதொடர்பாக விசாரித்து மூதாட்டிக்கு உதவிகளைச் செய்யுமாறு துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு உத்தரவிட்டார். அதன்படி பாட்டியின் வீட்டுக்கே நேரில் சென்ற துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், அவரது பிரச்சினைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.



இதைத் தொடர்ந்து முதலில் அவரது மகனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது விருப்பப்படி  ஒரு வாடகை வீடு பார்த்துத் தரப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து மூதாட்டி துணை ஆணையருக்கும்,நடவடிக்கை எடுக்கஉத்தரவிட்ட ஆணையருக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொண்டார்.

மூதாட்டியின் மகன் தற்போது மும்பையில் இருப்பதாக தெரிய வந்துள்ளதாம். அவருக்கு 60 வயதுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. அவரைத் தொடர்பு கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்