சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் சென்னை பெரம்பலூரில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். பத்துக்கும் மேற்பட்டோர் வந்து ஆம்ஸ்ட்ராங்கை அவரது வீட்டுக்கு அருகேயே வைத்து வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் இந்தக் கும்பல் போலீஸில் சரணடைந்தனர்.

இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறையின் தோல்வியே இந்த சம்பவத்திற்குக் காரணம். ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளின் சதித் திட்டத்தை காவல்துறை முன் கூட்டியே கண்டுபிடித்திருந்தால் கொலையைத் தவிர்த்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது. மேலும் எதிர்க்கட்சிகளும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக விமர்சிக்க ஆரம்பித்தன.
இந்தக் கொலைச் சம்பவத்தின் காரணமாக காவல்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் மீது விமர்சனங்கள் திரும்பி வந்த நிலையில், தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக அரசு நியமித்துள்ளது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அருண் நியமிக்கப்பட்டுள்ளார். அருண் தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்து வருகிறார்.
அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. டேவிட்சன் தேவாசிர்வாதம் தற்போது தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலை தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். அதில் டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}