சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் சென்னை பெரம்பலூரில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். பத்துக்கும் மேற்பட்டோர் வந்து ஆம்ஸ்ட்ராங்கை அவரது வீட்டுக்கு அருகேயே வைத்து வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் இந்தக் கும்பல் போலீஸில் சரணடைந்தனர்.

இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறையின் தோல்வியே இந்த சம்பவத்திற்குக் காரணம். ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளின் சதித் திட்டத்தை காவல்துறை முன் கூட்டியே கண்டுபிடித்திருந்தால் கொலையைத் தவிர்த்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது. மேலும் எதிர்க்கட்சிகளும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக விமர்சிக்க ஆரம்பித்தன.
இந்தக் கொலைச் சம்பவத்தின் காரணமாக காவல்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் மீது விமர்சனங்கள் திரும்பி வந்த நிலையில், தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக அரசு நியமித்துள்ளது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அருண் நியமிக்கப்பட்டுள்ளார். அருண் தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்து வருகிறார்.
அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. டேவிட்சன் தேவாசிர்வாதம் தற்போது தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலை தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். அதில் டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}