சென்னை: வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர். தொடர்ந்து உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பார்வதி நாயர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள, விலையுயர்ந்த பொருட்களான கைக்கடிகாரம், லேப்டாப், வாட்ச் போன்றவை திருட்டுப் போனதாக புகார் அளித்திருந்தார். மேலும் தன் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் மீது சந்தேகம் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே சுபாஷ் நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர், தன்னை தாக்கியதாக புகார் அளித்தார். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக சுபாஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், சுபாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், பார்வதி நாயர், கொடம்பாடி ராஜேஷ், இளங்கோவன் செந்தில், அருள்முருகன், அஜித் பாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி மேற்கண்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}