ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்.. நேற்று கைதான சீசிங் ராஜா.. இன்று என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Sep 23, 2024,09:47 AM IST

சென்னை:   பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று ஆந்திராவில் வைத்துக் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா, இன்று அதிகாலையில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன்மாதம் 25ம் தேதி தனது வீட்டுக்கு அருகே கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்து பல்வேறு ரவுடிகள் இந்தக் கொலை வழக்கில் சிக்கினர். இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளியான சம்போ செந்தில் இன்னும் சிக்கவில்லை.




கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி ஜூலை 15ம் தேதி அதிகாலையில் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்த நிலையில், அதிகாலையில் நீலாங்கரை அருகே வைத்து விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சீசிங் ராஜா போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமலன், தற்காப்புக்காக சீசிங் ராஜாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் சீசிங் ராஜா உயிரிழந்தார்.


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் இதுவரை 2 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று கைதான சீசிங் ராஜா மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர் ஒரு ஹிஸ்டரி ஷீட்டர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தேடலுக்குப் பின்னர் சிக்கியவர் சீசிங் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர்தான் இந்த சீசிங் ராஜா. ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்பதால் அவரைப் பழி தீர்க்கவே மொத்தப் பேரும் சேர்ந்து இந்தக் கொலையை செய்ததாக ஒரு தகவல் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.


ஏற்கனவே கைதானவர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, மனைவி பொற்கொடி, காதலி அஞ்சலை ஆகியோரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்