சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று ஆந்திராவில் வைத்துக் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா, இன்று அதிகாலையில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன்மாதம் 25ம் தேதி தனது வீட்டுக்கு அருகே கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்து பல்வேறு ரவுடிகள் இந்தக் கொலை வழக்கில் சிக்கினர். இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளியான சம்போ செந்தில் இன்னும் சிக்கவில்லை.
கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி ஜூலை 15ம் தேதி அதிகாலையில் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்த நிலையில், அதிகாலையில் நீலாங்கரை அருகே வைத்து விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சீசிங் ராஜா போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமலன், தற்காப்புக்காக சீசிங் ராஜாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் சீசிங் ராஜா உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் இதுவரை 2 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று கைதான சீசிங் ராஜா மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர் ஒரு ஹிஸ்டரி ஷீட்டர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தேடலுக்குப் பின்னர் சிக்கியவர் சீசிங் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர்தான் இந்த சீசிங் ராஜா. ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்பதால் அவரைப் பழி தீர்க்கவே மொத்தப் பேரும் சேர்ந்து இந்தக் கொலையை செய்ததாக ஒரு தகவல் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.
ஏற்கனவே கைதானவர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, மனைவி பொற்கொடி, காதலி அஞ்சலை ஆகியோரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}