ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்.. நேற்று கைதான சீசிங் ராஜா.. இன்று என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Sep 23, 2024,09:47 AM IST

சென்னை:   பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று ஆந்திராவில் வைத்துக் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா, இன்று அதிகாலையில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன்மாதம் 25ம் தேதி தனது வீட்டுக்கு அருகே கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்து பல்வேறு ரவுடிகள் இந்தக் கொலை வழக்கில் சிக்கினர். இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளியான சம்போ செந்தில் இன்னும் சிக்கவில்லை.




கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி ஜூலை 15ம் தேதி அதிகாலையில் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்த நிலையில், அதிகாலையில் நீலாங்கரை அருகே வைத்து விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சீசிங் ராஜா போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமலன், தற்காப்புக்காக சீசிங் ராஜாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் சீசிங் ராஜா உயிரிழந்தார்.


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் இதுவரை 2 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று கைதான சீசிங் ராஜா மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர் ஒரு ஹிஸ்டரி ஷீட்டர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தேடலுக்குப் பின்னர் சிக்கியவர் சீசிங் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர்தான் இந்த சீசிங் ராஜா. ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்பதால் அவரைப் பழி தீர்க்கவே மொத்தப் பேரும் சேர்ந்து இந்தக் கொலையை செய்ததாக ஒரு தகவல் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.


ஏற்கனவே கைதானவர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, மனைவி பொற்கொடி, காதலி அஞ்சலை ஆகியோரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்