சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று ஆந்திராவில் வைத்துக் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா, இன்று அதிகாலையில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன்மாதம் 25ம் தேதி தனது வீட்டுக்கு அருகே கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்து பல்வேறு ரவுடிகள் இந்தக் கொலை வழக்கில் சிக்கினர். இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளியான சம்போ செந்தில் இன்னும் சிக்கவில்லை.

கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி ஜூலை 15ம் தேதி அதிகாலையில் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்த நிலையில், அதிகாலையில் நீலாங்கரை அருகே வைத்து விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சீசிங் ராஜா போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமலன், தற்காப்புக்காக சீசிங் ராஜாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் சீசிங் ராஜா உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் இதுவரை 2 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று கைதான சீசிங் ராஜா மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர் ஒரு ஹிஸ்டரி ஷீட்டர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தேடலுக்குப் பின்னர் சிக்கியவர் சீசிங் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர்தான் இந்த சீசிங் ராஜா. ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்பதால் அவரைப் பழி தீர்க்கவே மொத்தப் பேரும் சேர்ந்து இந்தக் கொலையை செய்ததாக ஒரு தகவல் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.
ஏற்கனவே கைதானவர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, மனைவி பொற்கொடி, காதலி அஞ்சலை ஆகியோரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
 
                                                                            SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
 
                                                                            ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
 
                                                                            ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
 
                                                                            12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
 
                                                                            பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
 
                                                                            Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
 
                                                                            நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
 
                                                                            10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
 
                                                                            காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}