சென்னை: "ஊட்ல சொல்லிட்டு வன்ட்டியா மாமே".. இது சென்னையில் சாலையில் குறுக்கே பாய்வோரைப் பார்த்து வாகனதாரிகள் வீசும் கோப வார்த்தை. இதை வைத்தே ஒரு சூப்பர் விழிப்புணர்வு வீடியோவைப் போட்டுள்ளது சென்னை மாநகர காவல்துறை.
சாலையில் நடப்பதும், வாகனங்களில் செல்வதும் இப்போது சர்க்கஸ் செய்வது போலாகி விட்டது. பெருகி விட்ட மக்கள் தொகையாலும், அதிகரித்து விட்ட வாகனங்களாலும் எப்போதும் எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி கொடுமையாக இருக்கிறது.
நடப்பதும் சிரமமாக உள்ளது. காரணம் பல சாலைகளில் முறையான பிளாட்பாரம் இல்லை. சாலைகளில்தான் பலர் நடக்கிறார்கள். சாலைகளிலும் வாகனங்கள் முறையாகப் போவதில்லை. எல்லோருமே ரேஸில் போவது போலத்தான் அதி வேகமாகப் பாய்கிறார்கள்.
நிறுத்தி நிதானித்து பொறுமாயாக செல்ல யாருக்கும் மனம் இல்லை, நேரமும் இல்லை. எல்லாமே வேகம்தான்.. எல்லோருக்குமே அவசரம்தான். இப்படிப்பட்ட வேகம்தான் பல நேரங்களில் விபத்துக்குக் காரணமாகி விடுகிறது. பலரின் உயிரையும் காவு வாங்கி விடுகிறது. இந்த நேரத்தில்தான் சென்னை மாநகர காவல்துறை அருமையான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,
உங்க ஒரு நிமிஷ அவசரம்...
ரோட்ல பல பேர் கனவை சிதைச்சிடும்...
அதனால,
வீட்ல சொல்லிட்டு வாங்க...
ரோட்ல பார்த்து போங்க....
Don't drive on the wrong side என்ற அழகான கேப்ஷனும் கொடுத்துள்ளனர். நீங்களும் வீடியோ பாருங்க.. நிதானமா போங்க.. உங்க வீட்டில் மட்டுமல்ல, உங்களைப் போல சாலைகளில் செல்லும் மற்றவர்களின் வீடுகளிலும் கூட அவர்களுக்காக குடும்பத்தினர் காத்திருப்பார்கள்.
https://twitter.com/ChennaiTraffic/status/1707236657978851754
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}