சென்னை: "ஊட்ல சொல்லிட்டு வன்ட்டியா மாமே".. இது சென்னையில் சாலையில் குறுக்கே பாய்வோரைப் பார்த்து வாகனதாரிகள் வீசும் கோப வார்த்தை. இதை வைத்தே ஒரு சூப்பர் விழிப்புணர்வு வீடியோவைப் போட்டுள்ளது சென்னை மாநகர காவல்துறை.
சாலையில் நடப்பதும், வாகனங்களில் செல்வதும் இப்போது சர்க்கஸ் செய்வது போலாகி விட்டது. பெருகி விட்ட மக்கள் தொகையாலும், அதிகரித்து விட்ட வாகனங்களாலும் எப்போதும் எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி கொடுமையாக இருக்கிறது.
நடப்பதும் சிரமமாக உள்ளது. காரணம் பல சாலைகளில் முறையான பிளாட்பாரம் இல்லை. சாலைகளில்தான் பலர் நடக்கிறார்கள். சாலைகளிலும் வாகனங்கள் முறையாகப் போவதில்லை. எல்லோருமே ரேஸில் போவது போலத்தான் அதி வேகமாகப் பாய்கிறார்கள்.
நிறுத்தி நிதானித்து பொறுமாயாக செல்ல யாருக்கும் மனம் இல்லை, நேரமும் இல்லை. எல்லாமே வேகம்தான்.. எல்லோருக்குமே அவசரம்தான். இப்படிப்பட்ட வேகம்தான் பல நேரங்களில் விபத்துக்குக் காரணமாகி விடுகிறது. பலரின் உயிரையும் காவு வாங்கி விடுகிறது. இந்த நேரத்தில்தான் சென்னை மாநகர காவல்துறை அருமையான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,
உங்க ஒரு நிமிஷ அவசரம்...
ரோட்ல பல பேர் கனவை சிதைச்சிடும்...
அதனால,
வீட்ல சொல்லிட்டு வாங்க...
ரோட்ல பார்த்து போங்க....
Don't drive on the wrong side என்ற அழகான கேப்ஷனும் கொடுத்துள்ளனர். நீங்களும் வீடியோ பாருங்க.. நிதானமா போங்க.. உங்க வீட்டில் மட்டுமல்ல, உங்களைப் போல சாலைகளில் செல்லும் மற்றவர்களின் வீடுகளிலும் கூட அவர்களுக்காக குடும்பத்தினர் காத்திருப்பார்கள்.
https://twitter.com/ChennaiTraffic/status/1707236657978851754
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}