சென்னை: ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், சென்னையில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
ஸ்பா என்பது அழகு, மசாஜ், பேசியல், உடல் சிகிச்சைகள் உள்ளிட்ட பல ஆரோக்கியம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட தெரப்பி வழங்கும் மையமாகும். சென்னையில் பல இடங்களில் உடல் புத்துணர்ச்சி பெறுவதற்காக ஸ்பாக்கள் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். இங்கு கை, கால், கழுத்து, தோள்பட்டை, முதுகு, போன்றவற்றில் வலியை போக்க மசாஜ் செய்யப்படுகிறது. மேலும் உடலில் வலி நீங்க பணிபுரியும் பெண்கள் உட்பட பலர் புத்துணர்ச்சி பெற இந்த ஸ்பா மையங்களை நாடுகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இயங்கி வரும் சில ஸ்பா சென்டர்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம், போன்ற பகுதிகளில் உள்ள ஸ்பா சென்டர்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சோதனையின் போது உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}