சென்னை: ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், சென்னையில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
ஸ்பா என்பது அழகு, மசாஜ், பேசியல், உடல் சிகிச்சைகள் உள்ளிட்ட பல ஆரோக்கியம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட தெரப்பி வழங்கும் மையமாகும். சென்னையில் பல இடங்களில் உடல் புத்துணர்ச்சி பெறுவதற்காக ஸ்பாக்கள் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். இங்கு கை, கால், கழுத்து, தோள்பட்டை, முதுகு, போன்றவற்றில் வலியை போக்க மசாஜ் செய்யப்படுகிறது. மேலும் உடலில் வலி நீங்க பணிபுரியும் பெண்கள் உட்பட பலர் புத்துணர்ச்சி பெற இந்த ஸ்பா மையங்களை நாடுகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இயங்கி வரும் சில ஸ்பா சென்டர்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம், போன்ற பகுதிகளில் உள்ள ஸ்பா சென்டர்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சோதனையின் போது உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}