சென்னை: ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், சென்னையில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
ஸ்பா என்பது அழகு, மசாஜ், பேசியல், உடல் சிகிச்சைகள் உள்ளிட்ட பல ஆரோக்கியம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட தெரப்பி வழங்கும் மையமாகும். சென்னையில் பல இடங்களில் உடல் புத்துணர்ச்சி பெறுவதற்காக ஸ்பாக்கள் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். இங்கு கை, கால், கழுத்து, தோள்பட்டை, முதுகு, போன்றவற்றில் வலியை போக்க மசாஜ் செய்யப்படுகிறது. மேலும் உடலில் வலி நீங்க பணிபுரியும் பெண்கள் உட்பட பலர் புத்துணர்ச்சி பெற இந்த ஸ்பா மையங்களை நாடுகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இயங்கி வரும் சில ஸ்பா சென்டர்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம், போன்ற பகுதிகளில் உள்ள ஸ்பா சென்டர்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சோதனையின் போது உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}