சென்னை: ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், சென்னையில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
ஸ்பா என்பது அழகு, மசாஜ், பேசியல், உடல் சிகிச்சைகள் உள்ளிட்ட பல ஆரோக்கியம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட தெரப்பி வழங்கும் மையமாகும். சென்னையில் பல இடங்களில் உடல் புத்துணர்ச்சி பெறுவதற்காக ஸ்பாக்கள் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். இங்கு கை, கால், கழுத்து, தோள்பட்டை, முதுகு, போன்றவற்றில் வலியை போக்க மசாஜ் செய்யப்படுகிறது. மேலும் உடலில் வலி நீங்க பணிபுரியும் பெண்கள் உட்பட பலர் புத்துணர்ச்சி பெற இந்த ஸ்பா மையங்களை நாடுகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இயங்கி வரும் சில ஸ்பா சென்டர்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம், போன்ற பகுதிகளில் உள்ள ஸ்பா சென்டர்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சோதனையின் போது உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}