சென்னை: சென்னை, வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆறு மாவட்டங்களில் காலையிலேயே சூப்பரான மழை கொட்டியது. இந்த அடாத மழையிலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தனது சகாக்களோடு வாக்கிங் போய் தனது டெடிகேஷனை வெளிப்படுத்தினார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. காலையிலேயே மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை லேசாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த மழை அடுத்த 3 மணி நேரத்திற்குத் தொடரும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று சொல்லப்பட்டதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவ, மாணவியர் குடைகளைப் பிடித்தபடியும், ரெயின் கோட் போட்டபடியும், நனைந்தபடியும் பள்ளிகளுக்குக் கிளம்பிச் சென்றனர். அதான் இவ்வளவு மழை பெய்யுதே லீவு விட்டாதான் என்னவாம் என்ற ஏக்கப் பெருமூச்சையும் மழையோடு மழையாக நனைந்தபடி விட்டுச் சென்றனர் குழந்தைகள்.
மா.சு சூப்பர் வாக்கிங்: இந்த அடாத மழையிலும் தனது அன்றாடக் கடமையை நிறைவேற்றி அசத்தியுள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம். அதுதாங்க வாக்கிங் போய் கலக்கியுள்ளார்.
மா.சுப்ரமணியம் ஒரு பிட்னஸ் ப்ரீக். எந்த இடத்தில் இருந்தாலும் காலையில் வாக்கிங் போவதை விடவே மாட்டார். மலையாக இருந்தாலும் சரி, மழையே பெய்தாலும் சரி, விடாமல் வாக்கிங் போவார். அப்படித்தான் இன்று காலையிலும் கூட கொட்டிய மழைக்கு மத்தியில் கூலாக வாக்கிங் போய் சூடாக ஒரு வீடியோவையும் போட்டு விட்டுள்ளார்.
உடம்பு முக்கியம். உடம்பு நல்லாருக்கனும்னா உடற்பயிற்சி முக்கியம்.. என்ன காலநிலை என்றாலும் சோம்பேறியாக இருக்காதீங்க.. உங்க உடம்போட ஆரோக்கியம் உங்க கையில் என்பதையே வேகமாக நடக்கும் மா.சுவின் இந்த வாக்கிங் வெளிப்படுத்துகிறது.
சூப்பர் சார்.. இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாகட்டும்.. உங்களுக்கும்தான் மக்களே!
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}