சென்னை: சென்னையில் பெரிய அளவிலான மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் இன்று பிற்பகல் வாக்கில் திடீரென சென்னையின் பல பகுதிகளில் திடீர் கன மழை பெய்து மக்களை அதிர வைத்து விட்டது. குறிப்பாக அண்ணாநகர் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்ததால் மக்கள் குழப்பமடைந்து விட்டனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில்தான் அடித்து வருகிறது. இதனால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடலாம் என்று மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென கன மழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம், வில்லிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி என பல பகுதிகளிலும் கன மழை வெளுத்து விட்டது.

முக்கியமாக முகப்பேர் மேற்கு, பாடி, அம்பத்தூர், வளசரவாக்கம் பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு இங்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இத்தனைக்கும் சென்னையில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை எதையும் தரவில்லை. இதனால் மக்களும் மழை குறித்த எச்சரிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் அண்ணா நகரில் பெய்த மழை சற்றே அதிர வைத்து விட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}