சென்னை: சென்னையில் பெரிய அளவிலான மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் இன்று பிற்பகல் வாக்கில் திடீரென சென்னையின் பல பகுதிகளில் திடீர் கன மழை பெய்து மக்களை அதிர வைத்து விட்டது. குறிப்பாக அண்ணாநகர் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்ததால் மக்கள் குழப்பமடைந்து விட்டனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில்தான் அடித்து வருகிறது. இதனால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடலாம் என்று மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென கன மழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம், வில்லிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி என பல பகுதிகளிலும் கன மழை வெளுத்து விட்டது.

முக்கியமாக முகப்பேர் மேற்கு, பாடி, அம்பத்தூர், வளசரவாக்கம் பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு இங்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இத்தனைக்கும் சென்னையில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை எதையும் தரவில்லை. இதனால் மக்களும் மழை குறித்த எச்சரிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் அண்ணா நகரில் பெய்த மழை சற்றே அதிர வைத்து விட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}