சென்னை: சென்னையில் பெரிய அளவிலான மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் இன்று பிற்பகல் வாக்கில் திடீரென சென்னையின் பல பகுதிகளில் திடீர் கன மழை பெய்து மக்களை அதிர வைத்து விட்டது. குறிப்பாக அண்ணாநகர் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்ததால் மக்கள் குழப்பமடைந்து விட்டனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில்தான் அடித்து வருகிறது. இதனால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடலாம் என்று மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென கன மழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம், வில்லிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி என பல பகுதிகளிலும் கன மழை வெளுத்து விட்டது.
முக்கியமாக முகப்பேர் மேற்கு, பாடி, அம்பத்தூர், வளசரவாக்கம் பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு இங்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இத்தனைக்கும் சென்னையில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை எதையும் தரவில்லை. இதனால் மக்களும் மழை குறித்த எச்சரிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் அண்ணா நகரில் பெய்த மழை சற்றே அதிர வைத்து விட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}