Chennai Rains.. அண்ணாநகரை வச்சு செஞ்ச மழை.. 1 மணி நேரத்தில் 100 மி.மீ.. இது லிஸ்ட்லேயே இல்லையே!

Oct 30, 2024,01:46 PM IST

சென்னை: சென்னையில் பெரிய அளவிலான மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் இன்று பிற்பகல் வாக்கில் திடீரென சென்னையின் பல பகுதிகளில் திடீர் கன மழை பெய்து மக்களை அதிர வைத்து விட்டது. குறிப்பாக அண்ணாநகர் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்ததால் மக்கள் குழப்பமடைந்து விட்டனர்.


சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில்தான் அடித்து வருகிறது. இதனால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடலாம் என்று மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென கன மழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம், வில்லிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், வேளச்சேரி என பல பகுதிகளிலும் கன மழை வெளுத்து விட்டது.




முக்கியமாக முகப்பேர் மேற்கு, பாடி, அம்பத்தூர், வளசரவாக்கம் பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்தது. ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு இங்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


இத்தனைக்கும் சென்னையில் இன்று கன மழை பெய்யும் என்று  வானிலை மையம் எச்சரிக்கை எதையும் தரவில்லை. இதனால் மக்களும் மழை குறித்த எச்சரிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் அண்ணா நகரில் பெய்த மழை சற்றே அதிர வைத்து விட்டது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்