சென்னை: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா உள்ளிட்ட சில முக்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளை அந்த அணியின் தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார்.
அப்படி செய்வதில்லை என்பதை பாலிசியாகவே வைத்துள்ளோம். மும்பை இந்தியன்ஸ் வீரர்களை டிரேட் செய்யும் திட்டத்திலும் நாங்கள் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீபத்தில்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து சேர்ந்தார் ஹர்டிக் பாண்ட்யா. வந்த வேகத்தில் அவரை கேப்டனாக அறிவித்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். இது ரோஹித் சர்மா தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதெல்லாம் நியாயமே இல்லை என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியை அன் பாலோ செய்தனர்.

இந்த நிலையில் ரோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரப் போகிறார் என்று செய்திகள் பரவின. முன்னாள் வீரர்கள் சிலரும் கூட மஞ்சள் நிற ஜெர்சியில் ரோஹித் சர்மா படத்தை ஷேர் செய்ய ஆரம்பித்தனர். இதனால் சந்தேகம் வலுவடைந்து வந்தது. தற்போது வதந்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது. அதாவது ரோஹித் சர்மா மட்டும் வரலையாம், கூடவே சூர்ய குமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரும் கூட வருகிறார்களாம் என்று செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், பிற அணிகளிலிருந்து வீரர்களை டிரேட் செய்வதில்லை என்பதை பாலிசியாகவே வைத்துள்ளோம். அதில் மாற்றம் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணி குறித்த செய்திகளுக்கும் அது பொருந்தும். அவர்களை அணுகவும் இல்லை, அப்படி எந்த திட்டமும் இல்லை என்றார் அவர்.
அவர் இப்படிச் சொன்னாலும் கூட வதந்திகள் ஓய்வதாகத் தெரியவில்லை. நிச்சயம் ரோஹித் சர்மா சென்னை அணிக்கு வருவார்.. அது நிச்சயம் என்று பலரும் சூடம் ஏற்றாத குறையாக அடித்துச் சொல்லி வருகிறார்கள்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}