சென்னை: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா உள்ளிட்ட சில முக்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளை அந்த அணியின் தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார்.
அப்படி செய்வதில்லை என்பதை பாலிசியாகவே வைத்துள்ளோம். மும்பை இந்தியன்ஸ் வீரர்களை டிரேட் செய்யும் திட்டத்திலும் நாங்கள் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீபத்தில்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து சேர்ந்தார் ஹர்டிக் பாண்ட்யா. வந்த வேகத்தில் அவரை கேப்டனாக அறிவித்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். இது ரோஹித் சர்மா தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதெல்லாம் நியாயமே இல்லை என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியை அன் பாலோ செய்தனர்.

இந்த நிலையில் ரோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரப் போகிறார் என்று செய்திகள் பரவின. முன்னாள் வீரர்கள் சிலரும் கூட மஞ்சள் நிற ஜெர்சியில் ரோஹித் சர்மா படத்தை ஷேர் செய்ய ஆரம்பித்தனர். இதனால் சந்தேகம் வலுவடைந்து வந்தது. தற்போது வதந்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது. அதாவது ரோஹித் சர்மா மட்டும் வரலையாம், கூடவே சூர்ய குமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரும் கூட வருகிறார்களாம் என்று செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், பிற அணிகளிலிருந்து வீரர்களை டிரேட் செய்வதில்லை என்பதை பாலிசியாகவே வைத்துள்ளோம். அதில் மாற்றம் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணி குறித்த செய்திகளுக்கும் அது பொருந்தும். அவர்களை அணுகவும் இல்லை, அப்படி எந்த திட்டமும் இல்லை என்றார் அவர்.
அவர் இப்படிச் சொன்னாலும் கூட வதந்திகள் ஓய்வதாகத் தெரியவில்லை. நிச்சயம் ரோஹித் சர்மா சென்னை அணிக்கு வருவார்.. அது நிச்சயம் என்று பலரும் சூடம் ஏற்றாத குறையாக அடித்துச் சொல்லி வருகிறார்கள்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}