சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது ஐபிஎல் போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது. சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது.
17 வது ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சென்னை அணியின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸும், ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னையும் சந்திக்கவுள்ளன.

முன்னாள் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் அபாரமாக தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது சாம்பியன் பட்டத்தை வென்றது நினைவு இருக்கலாம். எனவே இன்றைய போட்டியில் சென்னையை தோற்கடிக்க குஜராத் தீவிரமாக முயலும் என்று எதிர்பார்க்க முடியும். அதே சமயம் கடந்த பைனலில் கொடுத்த அதே அதிரடியான பதிலை இந்த முறையும் சென்னை தனது சொந்த மண்ணில் வைத்து குஜராத்துக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை பந்தாடி வென்றது நினைவு இருக்கலாம். அப்போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே, ரஹானே, ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினர். பந்து வீச்சில், முஸ்தபிசுர் ரஹ்மான் பிரமாதப்படுத்தியிருந்தார். தீபக் சஹரும் கலக்கியிருந்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை எந்த வகையான உத்தியுடன் எதிர்கொள்ளும் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தோனி கேப்டன் பதிவிலிருந்து விலகி நிலையில், புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் தனது முதல் போட்டியை வெற்றியில் தொடங்கி உள்ள நிலையில் இன்றைய போட்டியிலும் அந்த வெற்றி பயணம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் இதுவரை ஐந்து முறை ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக குஜராத் அணி மூன்று முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு முறையும் வென்றுள்ளன. அதே சமயம் கடைசியாக சந்தித்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வென்றுள்ளது.
மெட்ரோ ரயில்கள் காத்திருக்கு மச்சாஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை ஒட்டி சென்னை மெட்ரோ ரயில் சிறப்பு சேவையை மேற்கொள்ளவுள்ளது. அதாவது இன்று இரவு 1 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, முன்கூட்டியே டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் மூலமாகவும் பயணச் சீட்டைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இரவு 11 மணிக்கு மேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைத்திலிருந்து மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}