சென்னை: தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பெசன்ட் நகரில் இன்று மாலை 4 மணிக்கு இறுதி கட்ட பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது தேர்தல் நடைபெறும். 39 தொகுதிகளிலும் சுமார் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதற் கட்ட வாக்குப்பதிவின் போது விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் சேர்ந்து வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறனையும் மற்றும் தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனையும் ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பெசன்ட் நகரில் இன்று மாலை பிரச்சாரம் செய்கிறார். இந்த பிரச்சாரத்துடன் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் நிறைவு செய்கிறார்.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் அனைத்து வகையான பிரச்சாரமும் தடை செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}