சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம். நாடு போற்றும் நான்காண்டு! பல்லாண்டு! என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து துவங்கி வைத்தார். பேருந்தில் ஏறி ஆய்வு செய்ததுடன் பொதுமக்களிடம் குறைகளை நிறைகளை கேட்டறிந்தார்.
நான்காண்டு திமுக ஆட்சியின் நிறைவு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு, குனிந்து - ஊர்ந்து - தவழ்ந்து தன்மானமிழந்து தவித்த அவலம் - மாவட்ட பேரிடர் என இக்கட்டான சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம்! என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி, "திராவிட மாடல் ஆட்சி என்பது, ஓர் இனத்தின் ஆட்சி! கருத்தியலின் ஆட்சி!" என நிறுவியிருக்கிறோம்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி, மாநில உரிமைகளைக் காத்து, மற்ற மாநிலங்களுக்கும் - ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது திராவிட மாடல் ஆட்சி! ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்;
தொலைநோக்குப் பார்வையோடு இன்று செய்ய வேண்டிய கடமைகளையும் - திட்டங்களையும் மனதில் கொண்டு, “நாடு போற்றும் நான்காண்டு! பல்லாண்டு!” என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம் உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. நாளை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!
Operation Sindoor.. பாகிஸ்தானை எப்படி தாக்கினோம்.. விளக்கிய பெண் அதிகாரிகள்.. யார் இவர்கள்?
4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!
மங்கள மீனாட்சிக்கு மதுரையில் திருக்கல்யாணம்.. பெண் குழந்தைகளுக்கு வைக்க 31 தமிழ்ப் பெயர்கள்!
ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!
இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!
IPL வரலாற்றில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. 3வது முறையாக.. 500+ ரன்களைக் கடந்து புதிய வரலாறு!
சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!
{{comments.comment}}