விழுப்புரம்: புயல் மழை பாதிப்புகளை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கோருவது எங்கள் கடமை. நிதி தருவது அவர்களின் கடமை. ஆனால் ஒவொரு முறையும் அதை செய்ய மறுக்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த மாதம் 30ம் தேதி மாலை கரையை கடக்கத் துவங்கி இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடந்த அன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்திலேயே அதிகப்படியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ அளவிற்கு கனமழை பெய்து விழுப்புரத்தை ஒரு வழி செய்து விட்டது. மயிலம், கூட்டேரிப்பட்டு,ரெட்டணை,பெரமண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் தத்தளித்தன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கு பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புயல் மழை பாதிப்புகளை கணக்கிட்டு ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி கோருவது எங்கள் கடமை. நிச்சயமாக அனுப்புவோம். நிதி தருவது அவர்களின் கடமை. ஆனால் ஒவ்வொரு முறையும் அதை செய்ய மறுக்கிறார்கள். நம்பிக்கையோடு தான் அனுப்புகிறோம். ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டால் அதையும் சமாளிப்போம்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சுமார் 3.18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. மழை நின்ற பிறது பயிர் சேதங்களை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பி, விரைவில் மத்திய குழுவை அனுப்பி வைக்க கோரிக்கை வைப்போம்.
விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக கனமழை பெய்துள்ள கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு துணை முதல்வர் உதயநிதியை உடனே போகச் சொல்லியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 2000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்று கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் அவர் தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை பட்டியலிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் CycloneFengal சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, #NDRF-இல் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}