சென்னை: கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரில் ஒருவர், துறை அமைச்சருடன் சென்று பார்வையிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்வராயன் மலைப்பகுதியில்தான் பெருமளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. எந்த ஆட்சி அமைந்தாலும் இதைத் தடுக்க முடிவதில்லை. தற்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் போலீஸார் தொடர்ந்து சோதனை நடத்தி பல ஊறல்களைக் கண்டுபிடித்து அழித்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வராயன் மலைப்பகுதி கிராமங்கள் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றி முன்னேறாமல் உள்ளது. இதனால்தான் இந்த அவல நிலை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்களின் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கானது கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சில யோசனைகளைத் தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறுகையில், கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்கள் நிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அமைச்சர் உதயநிதி சென்று பார்டையிட வேண்டும். நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு மீதான விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}