சீனாவில் ஆட்குறைப்பில் குதித்த கூகுள்.. அதிக சம்பளம் வாங்குவோர் டிஸ்மிஸ்!

Mar 07, 2023,10:51 AM IST

ஹாங்காங்:  சீனாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர், உயர்ந்த பொறுப்பில்  உள்ளோர் முதல் கட்டமாக நீக்கப்பட்டு வருகின்றனர்.


உலக அளவில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. டிவிட்டர் தொடங்கி மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் என பலரும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.


இந்த நிலையில் கூகுள் நிறுவனம் சீனாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.  அதிக சம்பளம் வாங்குவோர் மற்றும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் முதல் கட்டமாக வேலையை விட்டு அனுப்பப்படுகின்றனர். இதன் மூலம் செலவுகளைக் குறைத்து திறனை அதிகரிக்க முடியும் என்று கூகுள் விளக்கம் அளித்துள்ளது.




மார்ச் 10ம் தேதிக்குள் தாங்களாகவே விலகினால் சில சலுகைகளையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் 10ம் தேதிக்கு பிறகு நீக்கப்படும் ஊழியர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காதாம்.


வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு  3 மாத கால பஃபர் பீரியடையும் கூகுள் அறிவித்துள்ளது. அதாவது வேலை நீக்கம் செய்யப்பட்ட பிறகு 3 மாதங்களுக்கு சம்பளம் மட்டும் தரப்படுமாம். 


கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சமீபத்தில்தான் 12,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. இவர்களது வேலை நீக்கத்தில் 100 ரோபோட்டுகளும் கூட அடக்கம். கூகுள் தலைமை அலுவலகத்தில் கான்டீன்களை சுத்தம் செய்யும் பணியில் இந்த ரோபோட்டுகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அதற்கும் பராமரிப்பு செலவாகிறது என்று கூறி அவற்றையும் நீக்கி விட்டனர்.  இந்தியாவிலும் 400க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்