சீனாவில் ஆட்குறைப்பில் குதித்த கூகுள்.. அதிக சம்பளம் வாங்குவோர் டிஸ்மிஸ்!

Mar 07, 2023,10:51 AM IST

ஹாங்காங்:  சீனாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர், உயர்ந்த பொறுப்பில்  உள்ளோர் முதல் கட்டமாக நீக்கப்பட்டு வருகின்றனர்.


உலக அளவில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. டிவிட்டர் தொடங்கி மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் என பலரும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.


இந்த நிலையில் கூகுள் நிறுவனம் சீனாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.  அதிக சம்பளம் வாங்குவோர் மற்றும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் முதல் கட்டமாக வேலையை விட்டு அனுப்பப்படுகின்றனர். இதன் மூலம் செலவுகளைக் குறைத்து திறனை அதிகரிக்க முடியும் என்று கூகுள் விளக்கம் அளித்துள்ளது.




மார்ச் 10ம் தேதிக்குள் தாங்களாகவே விலகினால் சில சலுகைகளையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் 10ம் தேதிக்கு பிறகு நீக்கப்படும் ஊழியர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காதாம்.


வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு  3 மாத கால பஃபர் பீரியடையும் கூகுள் அறிவித்துள்ளது. அதாவது வேலை நீக்கம் செய்யப்பட்ட பிறகு 3 மாதங்களுக்கு சம்பளம் மட்டும் தரப்படுமாம். 


கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சமீபத்தில்தான் 12,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. இவர்களது வேலை நீக்கத்தில் 100 ரோபோட்டுகளும் கூட அடக்கம். கூகுள் தலைமை அலுவலகத்தில் கான்டீன்களை சுத்தம் செய்யும் பணியில் இந்த ரோபோட்டுகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அதற்கும் பராமரிப்பு செலவாகிறது என்று கூறி அவற்றையும் நீக்கி விட்டனர்.  இந்தியாவிலும் 400க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்