அதிமுகவைப் பார்த்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

Jan 08, 2025,06:49 PM IST

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் காவல்துறையும், அரசும் எந்த பாரபட்சமும் பார்காகமல் நடவடிக்கை எடுத்துள்ளன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். அதேபோல் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கைது செய்யப்பட்டார். மதுரையில் போராட்டம் நடத்திய குஷ்பூவும் கைது செய்யப்பட்டார்.  இந்த கைது நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாகின.


இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


 


அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், சம்பவம் நடந்த இடத்தில் சுற்றி இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை அடிப்படையாகக் கொண்டுதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புலன் விசாரணையில் குற்றவாளி வேறு யாராக இருந்தாலும் சரி மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அவர்கள் மீது தயவு தாட்சனையே இல்லாமல் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். நான் இதை 100% உறுதியோடு சொல்கிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. 


அதேபோல்  இந்த வழக்கில் விரைவில் விசாரணை மேற்கொண்டு 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் இது விசாரிக்கப்படும்.


போராட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை  எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். யார் போராட்டம் நடத்துவதாக  இருந்தாலும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். நேற்று கூட  அனுமதிக்கப்படாத இடங்களில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கள நிலவரத்தை ஆய்வு செய்து போலீஸ் அனுமதி தரும். இது காவல்துறையின் கட்டுப்பாடு.


கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் அப்போதைய அதிமுக அரசு நடந்து கொண்ட விதம் அனைவருக்குமே தெரியும். முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை காப்பாற்றும் நோக்கில்தான் அப்போதைய அரசு நடந்து கொண்டது. இப்போதைய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் திமுக காரர் அல்ல, வெறும் திமுக அனுதாபி அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை குற்றவாளி எந்தக் கட்சி என்ற பாகுபாடே கிடையாது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படித்தான் நடவடிக்கை எடுத்துள்ளோம்.


சட்டையில் யார் அந்த சார் என்று பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் இப்படி நடந்து கொண்டதை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். கடந்த அதிமுக ஆட்சியைப் பார்த்து யார் அந்த சார் என்று கேட்டு என்னால் நூறு கேள்விகள் கேட்க முடியும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்