கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

Apr 24, 2025,06:35 PM IST

சென்னை: கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.


தமிழக சட்டசபை இன்று கூடியதும் சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுகவை சேர்ந்தவர்கள் அனைவரும் வரவேற்பு அளித்தனர்.


இதனையடுத்து இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், எல்லா திறமைகளையும் பெற்ற ஒரு சிறந்த தலைவராக ஆளுமை பெற்று வாழ்ந்தவர். இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் கலைஞர் கருணாநிதி.இதனால் கலைஞர் கருணாநிதி பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அதே போல் எல்லா தலைவர்களின் பெயர்களிலும் ஒரு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.ஆனால் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் இல்லை.கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும் என ஜி.கே வாசனும் தெரிவித்தார். இவர்களை தொடர்ந்து

சிந்தனைச் செல்வன்,  நாகைமாலி, இராமச்சந்திரன், டாக்டர்.சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, ரா. ஈஸ்வரன், தி. வேல்முருகன்,பேரவைத் தலைவர் ஆகியோரும் விதி எண் 55 ஐ பயன்படுத்தி கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர். 




இந்த நிலையில் பல்வேறு கட்சிகள் இணைந்து கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானத்தின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 


அதன்படி, நாட்டில் முதல் இடத்தில் இருக்க கூடிய கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும் கூட அவர்களில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கலைஞர் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். இதை எவ்வித தயக்கமும் இன்றி அறிவிக்கிறேன் என கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்