சென்னை: தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கித் தவிப்போருக்கு உதவ வாட்ஸ்அப் எண்ணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்:
அதி கனமழையால் அல்லலுறும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, எற்கனவே களப்பணியில் ஈடுபட்டுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ப.மூரத்தி, கீதா ஜீவன், மனோ தங்கராஜ், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் கனிமொழி, ஞானதிரவியம் ஆகியோரைக் கூடுதலாக நியமித்துள்ளேன்.
உதவி தேவைப்படும் பொதுமக்கள் 8148539914 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், @tn_rescuerelief
என்ற எக்ஸ் தள முகவரியிலும் தொடர்புகொள்ளவும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
களம் குதித்த பொதுமக்கள், கட்சியினர்
இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மக்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்கள் பெருமளவில் இறங்கியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் திரண்டு சென்று உதவி செய்து வருகின்றனர்.
பல்வேறு கட்சியினர், ரசிகர் மன்றத்தினர் என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தென் மாவட்டங்களில் இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் வெள்ளக்காடானதில்லை என்பதால் ஒட்டுமொத்தமாக தென்கோடி மாவட்டங்கள் நான்கும் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}