சென்னை: தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கித் தவிப்போருக்கு உதவ வாட்ஸ்அப் எண்ணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்:
அதி கனமழையால் அல்லலுறும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, எற்கனவே களப்பணியில் ஈடுபட்டுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ப.மூரத்தி, கீதா ஜீவன், மனோ தங்கராஜ், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் கனிமொழி, ஞானதிரவியம் ஆகியோரைக் கூடுதலாக நியமித்துள்ளேன்.
உதவி தேவைப்படும் பொதுமக்கள் 8148539914 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், @tn_rescuerelief
என்ற எக்ஸ் தள முகவரியிலும் தொடர்புகொள்ளவும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

களம் குதித்த பொதுமக்கள், கட்சியினர்
இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மக்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்கள் பெருமளவில் இறங்கியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் திரண்டு சென்று உதவி செய்து வருகின்றனர்.
பல்வேறு கட்சியினர், ரசிகர் மன்றத்தினர் என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தென் மாவட்டங்களில் இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் வெள்ளக்காடானதில்லை என்பதால் ஒட்டுமொத்தமாக தென்கோடி மாவட்டங்கள் நான்கும் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}