அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறாரா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன அந்த பதில்!

Aug 05, 2024,06:53 PM IST
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி  வழங்குவது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு தனது தந்தை கருணாநிதி ஸ்டைலில், முதல்வர் முக ஸ்டாலின் நச் என்று பதில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது சம்பந்தமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள திமுக கூட்டங்களிலும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். 



இது குறித்து அமைச்சர் உதயநிதியிடமே செய்தியாளர்கள் கேட்டபோது,, ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எந்த பதவி வந்தாலும் இளைஞரணி செயலாளர் பதவியே எனக்கு மிகவும் பிடித்தது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்லவுல்ளார். அங்கு அதிக நாட்கள் தங்க உள்ளதால், அவருடைய வேலைகளை  கவனிக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தரப்படலாம் என்ற பேச்சு பலமாக எழுந்தது.

இதுவரை துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர் முக ஸ்டாலின் எதுவும் பதில் சொல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்ற முதல்வர் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார். கொளத்தூர் துணை மின்நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவநீர் அகற்றும் நிலையத்தை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது முதல்வர் கூறுகையில், சென்னையில் பருவ மழைக்காலத்தில் எந்த அளவு மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அளவில் தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் எங்கு மழை நீர் தேங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்றார் அவர்.

உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக கோரிக்கைகள் வலுத்துள்ளதே என்ற கேள்விக்கு, பதில் அளித்த முதல்வர் கோரிக்கைகள் வலுத்துள்ளது ஆனால் பழுக்கவில்லை என பதில் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்