வயநாடு நிலச்சரிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.. கேரளாவுக்கு உதவுவோம் என்று அறிவிப்பு

Jul 30, 2024,11:00 AM IST

வயநாடு:   கேரளாவை உலுக்கி எடுத்துள்ள வயநாடு நிலச்சரிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இறந்த உடல்களாக மீட்கப்பட்டு வரும் நிலையில் இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளார். 


தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் அதி தீவிரமாக மாறியுள்ளது. பெரு மழையும், வெள்ளப் பெருக்குமாக உள்ளது. குறிப்பாக முண்டக்கை சூரல்மலை  என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.  மிகப் பெரிய அளவில் நடந்த இந்த நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க கடுமையா போராட்டம் நடந்து வருகிறது. 




ஏகப்பட்ட மீட்புப் படையினர் உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கியுள்ளனர். தொடர்ந்து மழையும் பெய்து வருவதாலும், இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாலும் மீட்புப் பணிகளில் பெரும் சவால் நிலவுகிறது.


இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வயநாடு பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு சம்பவம் நடந்து பலர் உயிரிழந்த தகவல் அறிந்து மிகவும் வேதனையுற்றேன் . விலை மதிப்பில்லாத உயிர்கள் பறி போயிருப்பது கவலை தருகிறது.


இன்னும் பலர் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்குண்டு இருப்பதாக அறிகிறேன். அவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் நம்புகிறேன்.


நமது சகோதர மாநிலமான கேரளாவுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் கை கொடுக்க, தோள் கொடுக்க தேவையான உதவிகளைச் செய்ய தமிழ்நாடு எப்போதும் தயாராக இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்