வயநாடு நிலச்சரிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.. கேரளாவுக்கு உதவுவோம் என்று அறிவிப்பு

Jul 30, 2024,11:00 AM IST

வயநாடு:   கேரளாவை உலுக்கி எடுத்துள்ள வயநாடு நிலச்சரிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இறந்த உடல்களாக மீட்கப்பட்டு வரும் நிலையில் இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளார். 


தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் அதி தீவிரமாக மாறியுள்ளது. பெரு மழையும், வெள்ளப் பெருக்குமாக உள்ளது. குறிப்பாக முண்டக்கை சூரல்மலை  என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.  மிகப் பெரிய அளவில் நடந்த இந்த நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க கடுமையா போராட்டம் நடந்து வருகிறது. 




ஏகப்பட்ட மீட்புப் படையினர் உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கியுள்ளனர். தொடர்ந்து மழையும் பெய்து வருவதாலும், இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாலும் மீட்புப் பணிகளில் பெரும் சவால் நிலவுகிறது.


இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வயநாடு பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு சம்பவம் நடந்து பலர் உயிரிழந்த தகவல் அறிந்து மிகவும் வேதனையுற்றேன் . விலை மதிப்பில்லாத உயிர்கள் பறி போயிருப்பது கவலை தருகிறது.


இன்னும் பலர் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்குண்டு இருப்பதாக அறிகிறேன். அவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் நம்புகிறேன்.


நமது சகோதர மாநிலமான கேரளாவுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் கை கொடுக்க, தோள் கொடுக்க தேவையான உதவிகளைச் செய்ய தமிழ்நாடு எப்போதும் தயாராக இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்