பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற.. இந்திய அணிக்கு.. முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து..!

Feb 24, 2025,10:56 AM IST

சென்னை: சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே உத்வேகத்துடன் சாம்பியன்ஷிப் டிராஃபியையும் வெல்வோம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின்.



சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் ஐ தேர்வு செய்தது.முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பிறகு நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் 46, சௌத் ஷகீல் 62 , குஷ்டில் 37 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசியாக பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்திருந்தது. 




இதனைத் தொடர்ந்து 242 என்ற இலக்குடன் களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை தொடங்கினாலும் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.சுப்மன் கில் அடுத்தடுத்து பவுண்டர்களை விளாசி 46 பந்துகளில் 52 ரன்களை குவித்தார்.அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த விராட் கோலி நிதானமாக விளையாட ஆரம்பித்தார்.  கில்லுக்கு பிறகு களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் உயர்ந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்ஷிர் பட்டேல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி 111 பந்துகளில் சதம் விளாசி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.


இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 244 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாழ்த்து குறிப்பில்,


சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அபார சதத்துடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலிக்கு பாராட்டுகள். இதே உத்வேத்துடன் சாம்பியன் டிராபியை வெல்வோம் எனவும்  பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்