பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற.. இந்திய அணிக்கு.. முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து..!

Feb 24, 2025,10:56 AM IST

சென்னை: சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே உத்வேகத்துடன் சாம்பியன்ஷிப் டிராஃபியையும் வெல்வோம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின்.



சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் ஐ தேர்வு செய்தது.முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பிறகு நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் 46, சௌத் ஷகீல் 62 , குஷ்டில் 37 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசியாக பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்திருந்தது. 




இதனைத் தொடர்ந்து 242 என்ற இலக்குடன் களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை தொடங்கினாலும் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.சுப்மன் கில் அடுத்தடுத்து பவுண்டர்களை விளாசி 46 பந்துகளில் 52 ரன்களை குவித்தார்.அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த விராட் கோலி நிதானமாக விளையாட ஆரம்பித்தார்.  கில்லுக்கு பிறகு களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் உயர்ந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்ஷிர் பட்டேல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி 111 பந்துகளில் சதம் விளாசி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.


இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 244 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாழ்த்து குறிப்பில்,


சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அபார சதத்துடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலிக்கு பாராட்டுகள். இதே உத்வேத்துடன் சாம்பியன் டிராபியை வெல்வோம் எனவும்  பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்