செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 33 இடங்களில் தனது ஆலைகளை நிறுவி உள்ளது.குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீட்டில், 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதத்தில் இந்நிறுனம் ஒரு ஆலையை நிறுவியுள்ளது. இந்த ஆலையில், சோப்புகள், முக அழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் ஆகியவற்றை தயாரிக்கப்பட உள்ளது.
இந்த ஆலையின் மூலம் 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும், அத்துடன் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக அரசிற்கும், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
2024ம் ஆண்டு ஜனவரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அடிக்கல் நாட்டிய, ஒரே ஆண்டில் ஆலை உற்பத்தியை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருட்கள் சந்தை வாய்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை சந்தையாக கொண்டுள்ளன. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அத்துடன் இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றியும் வருகிறது. தெற்காசியாவிலேயே முதலீடு மேற்கொள்ள சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெறும் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். தமிழ்நாடு வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூக நிதியை உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்டது. 50 விழுக்காடு அளவுக்கு, பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறாளிகளுக்கு வேலை வழங்க உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மைக்கு நிகராக தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு விளங்குகிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}