கலைஞர் தந்த இசைஞானி பட்டம்.. அதுதான் நிக்குது.. இளையராஜாவிடம் பேசி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Mar 02, 2025,12:45 PM IST

சென்னை: இசைஞானி இளையராஜாவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இசைஞானியின் சிம்பொனி அரங்கேற்றம் மார்ச் 8ம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் நேரில் போய் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.


இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை மார்ச் 8ம் தேதி லண்டனில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது. இந்த நாளுக்காக உலகெங்கும் உள்ள இளையராஜா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இளையராஜாவுக்கு வாழ்த்துகளும் குவிந்து கொண்டுள்ளன. சமீபத்தில், கமல்ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இளையராஜாவை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்போது, தமிழ்நாடு அரசு சார்பிலும் என் சார்பிலும், கலைஞர் சார்பிலும் உங்களைக் கெளரவிக்கிறேன் என்று கூறி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.


பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். அப்போது, ஐயாதான் (கலைஞர்) எனக்கு இசைஞானின்னு பெயர் சூட்டினார், அதான் நீடிக்குது என்று இளையராஜா கூற, எத்தனையோ பட்டங்கள் வந்தாலும் அதுதான் நிக்குது என்று கூறி மகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.





இசைஞானியாக, உலக அளவில் எல்லா தமிழர் உள்ளங்கள், இல்லங்களில் குடியிருக்கிறீர்கள் என்று கூறிய முதல்வர், ஜூன் 3 உங்க பிறந்த நாளை  2ம் தேதிக்கு மாத்திக்கிட்டீங்க என்று கூற, எல்லாம் அப்பாவுக்காக என்று சொல்லி சிரித்தார் இசைஞானி. கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. அதே நாளில்தான் இளையராஜாவுக்கும் பிறந்த நாள். ஆனால் கலைஞர் பிறந்த நாளன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி அவரது முக்கியத்துவத்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக முதல் நாளுக்கு தனது பிறந்த நாளை மாற்றிக் கொண்டவர் இளையராஜா.


இளையராஜாவின் சிம்பொனி குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் விடை பெறும்போது, சமீபத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் பெயர் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு சிடி கொடுத்தாங்க. அவர் பாடியது. அதில் பெரும்பாலும் உங்க இசைதான். அதைத்தான் கேட்டுட்டிருக்கேன் என்று கூறி நெகிழந்தார் முதல்வர்.




இந்த சந்திப்பு தொடர்பாக  முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது


ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.


அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். 


உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தைப்பூசமும் வள்ளலாரும்.. உணர்த்தும் அருட் பெரும் செய்தி!

news

நீதி சொல்ல இத்தனை நூல்களா.. தமிழின் தனிப்பெருமை.. உங்களுக்குத் தெரியுமா?

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்