சென்னை: கன மழையிலிருந்து மெல்ல மீண்டு வரும் சென்னையில் உள்ள அம்மா உணவங்களில் இன்று ஏழை எளிய மக்களுக்கு உணவு வகைகள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று சென்னை, அதன் புறநகர்கள் மற்றும் பல்வேறு வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதிர்ஷ்டவசமாக மாலைக்கு மேல் மழை மெல்லக் குறைந்து தற்போது கிட்டத்தட்ட நின்று விட்டது. இதற்குக் காரணம், தெற்கு ஆந்திராவை நோக்கி தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியிருப்பதால்.
இந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. இந்த இடத்தில் தூய்மைப் பணியாளர்களின் அயராத பணியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். கடந்த சில நாட்களாகவே அவர்கள்தான் முன்களத்தில் நின்று தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மழை நீர் வடிகால்களை தொடர்ந்து கண்காணித்து வருவது, எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அதை சரி செய்வது, சாக்கடைகள் சரியாக போகிறதா என்று பார்த்து அதை சரி செய்தது. சாலைகளில் தேங்கி கிடக்கும் குப்பை உள்ளிட்டவற்றை அகற்றுவது என்று தொடர்ந்து அயராமல் பணி செய்து வருகிறார்கள்.
நேற்றும் கூட விடிய விடிய தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகளும் கூட உடன் இருந்து பணிகளைக் கண்காணித்து முடுக்கி விட்டு வந்தனர். இவர்களது இந்த ஓய்வில்லா சேவை காரணமாகத்தான் சென்னையில் பெரிய அளவில் மக்களுக்கு துயரம் ஏற்படாமல் இந்த முதல் மழையை நாம் நிம்மதியாக கடக்க முடிந்தது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}