சென்னை: கன மழையிலிருந்து மெல்ல மீண்டு வரும் சென்னையில் உள்ள அம்மா உணவங்களில் இன்று ஏழை எளிய மக்களுக்கு உணவு வகைகள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று சென்னை, அதன் புறநகர்கள் மற்றும் பல்வேறு வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதிர்ஷ்டவசமாக மாலைக்கு மேல் மழை மெல்லக் குறைந்து தற்போது கிட்டத்தட்ட நின்று விட்டது. இதற்குக் காரணம், தெற்கு ஆந்திராவை நோக்கி தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியிருப்பதால்.
இந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. இந்த இடத்தில் தூய்மைப் பணியாளர்களின் அயராத பணியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். கடந்த சில நாட்களாகவே அவர்கள்தான் முன்களத்தில் நின்று தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மழை நீர் வடிகால்களை தொடர்ந்து கண்காணித்து வருவது, எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அதை சரி செய்வது, சாக்கடைகள் சரியாக போகிறதா என்று பார்த்து அதை சரி செய்தது. சாலைகளில் தேங்கி கிடக்கும் குப்பை உள்ளிட்டவற்றை அகற்றுவது என்று தொடர்ந்து அயராமல் பணி செய்து வருகிறார்கள்.
நேற்றும் கூட விடிய விடிய தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகளும் கூட உடன் இருந்து பணிகளைக் கண்காணித்து முடுக்கி விட்டு வந்தனர். இவர்களது இந்த ஓய்வில்லா சேவை காரணமாகத்தான் சென்னையில் பெரிய அளவில் மக்களுக்கு துயரம் ஏற்படாமல் இந்த முதல் மழையை நாம் நிம்மதியாக கடக்க முடிந்தது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
{{comments.comment}}