சென்னை மழை எதிரொலி.. அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Oct 16, 2024,05:52 PM IST

சென்னை: கன மழையிலிருந்து மெல்ல மீண்டு வரும் சென்னையில் உள்ள அம்மா உணவங்களில் இன்று ஏழை எளிய மக்களுக்கு உணவு வகைகள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று சென்னை, அதன் புறநகர்கள் மற்றும் பல்வேறு வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதிர்ஷ்டவசமாக மாலைக்கு மேல் மழை மெல்லக் குறைந்து தற்போது கிட்டத்தட்ட நின்று விட்டது. இதற்குக் காரணம், தெற்கு ஆந்திராவை நோக்கி தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியிருப்பதால்.


இந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. இந்த இடத்தில் தூய்மைப் பணியாளர்களின் அயராத பணியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். கடந்த சில நாட்களாகவே அவர்கள்தான் முன்களத்தில் நின்று தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மழை நீர் வடிகால்களை தொடர்ந்து கண்காணித்து வருவது, எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அதை சரி செய்வது, சாக்கடைகள் சரியாக போகிறதா என்று பார்த்து அதை சரி செய்தது. சாலைகளில் தேங்கி கிடக்கும் குப்பை உள்ளிட்டவற்றை அகற்றுவது என்று தொடர்ந்து அயராமல் பணி செய்து வருகிறார்கள்.




நேற்றும் கூட விடிய விடிய தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகளும் கூட உடன் இருந்து பணிகளைக் கண்காணித்து முடுக்கி விட்டு வந்தனர். இவர்களது இந்த ஓய்வில்லா சேவை காரணமாகத்தான் சென்னையில் பெரிய அளவில் மக்களுக்கு துயரம் ஏற்படாமல் இந்த முதல் மழையை நாம் நிம்மதியாக கடக்க முடிந்தது.


இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்