சென்னை: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு வைத்து இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை படத்தைப் பார்த்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம்தான் வாழை. இது தனது சிறு வயது வாழ்க்கையின் தொகுப்பு என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தில் மாரி செல்வராஜ் சித்தரித்துள்ள காட்சிகளும், கதாபாத்திரங்களும் பேசு பொருளாகியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு வைத்து வாழை படத்தைப் பார்த்து ரசித்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதில் கூறியுள்ளதாவது:
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜுக்ுக அன்பின் வாழ்த்துகள்.
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வருக்கு மாரி செல்வராஜ் நன்றி
இதற்கிடையே, தனது வாழை படம் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}