சென்னை: முதல்வரின் முதல் தனி செயலராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது தனி செயலாளராக எம்.எஸ்.சண்முகமும், மூன்றாவது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வரின் தனிச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தனிச் செயலாளர்களாக 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் தனி செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமை செயலாளராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே தலைமை செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உமாநாத் ஐஏஎஸ்
முதல் தனி செயலாளர் உமாநாத்துக்கு வணிக வரி, பொதுத்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை, தொழில்துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, நீர்வளத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சண்முகம் ஐஏஎஸ்
இரண்டாவது தனி செயலாளரான சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, வீட்டு வசதி, முதல்வரின் அலுவலக நிர்வாகம், சட்டத்துறை உள்ளிட்ட 12 துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனு ஜார்ஜ் ஐஏஎஸ்
மூன்றாவது தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனு ஜார்ஜிற்கு முதல்வரின் பயண ஏற்பாடுகள், கால்நடை, பள்ளிக்கல்வி, விளையாட்டு, ஆதிதிராவிடத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கப்டடுள்ளது.
இந்த தனிச் செயலாளர்கள் குறித்த அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}