முதல்வருக்கு 3 தனிச்செயலாளர்கள் நியமனம்.. ஆணை பிறப்பித்தது தமிழக அரசு

Aug 20, 2024,02:26 PM IST

சென்னை: முதல்வரின் முதல் தனி செயலராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.  இரண்டாவது தனி செயலாளராக எம்.எஸ்.சண்முகமும்,  மூன்றாவது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


முதல்வரின் தனிச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தனிச் செயலாளர்களாக 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரின்  தனி செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமை செயலாளராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே தலைமை செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




உமாநாத் ஐஏஎஸ்


முதல் தனி செயலாளர் உமாநாத்துக்கு வணிக வரி, பொதுத்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை, தொழில்துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, நீர்வளத்துறை உள்ளிட்ட  13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


 சண்முகம் ஐஏஎஸ்

 

இரண்டாவது தனி செயலாளரான சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, வீட்டு வசதி, முதல்வரின் அலுவலக நிர்வாகம், சட்டத்துறை உள்ளிட்ட 12 துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.


அனு ஜார்ஜ் ஐஏஎஸ்


மூன்றாவது தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனு ஜார்ஜிற்கு முதல்வரின் பயண ஏற்பாடுகள், கால்நடை, பள்ளிக்கல்வி, விளையாட்டு, ஆதிதிராவிடத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கப்டடுள்ளது.


இந்த தனிச் செயலாளர்கள் குறித்த அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?

news

தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?

news

Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

news

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!

news

ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்