ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பெருகும்.. குறையாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

Jan 09, 2025,07:20 PM IST

சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறையாது, பெருகத்தான் செய்யும். இன்று நாம் அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இனி மக்களின் எல்லா பயன்பாடும் டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் Umagine tn என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாடு 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. 


இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறையாது, பெருகத்தான் செய்யும். இன்று நாம் அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இனி மக்களின் எல்லா பயன்பாடும் டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும்.




சரியான திசையை நோக்கி மாநாட்டை ஒருங்கிணைத்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி. தமிழ்நாட்டின் நீடித்த நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் மாநாடு இந்த மாநாடு. வணிகத்தையும் தொழில்நுட்பத்தையும் ஊக்குவிப்பதில் மற்றவர்களை விட முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. மின் வாகன உற்பத்தி வளரும் தொழில்நுட்பங்களை மாற்றங்களை ஏற்படுத்தும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் கூடுதல் வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன்.


இன்று நாம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கோவை, சேலம், மதுரை, திருச்சி, ஓசூர், நெல்லை, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடியில்  எல்காட் பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளது.2ம் கட்ட மற்றும் 3ம் கட்ட நகரங்களிலும் எல்காட் தொழில்நுட்ப பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளன. நகரத்தில் மட்டும் வளர்ச்சி குவியக்கூடாது. உண்மையான வளர்ச்சி சமச்சீரான பரந்துபட்டதாக இருக்க வேண்டும். 900க்கும் மேற்பட்ட புதுத்தொழில் நிறுவனங்கள் உருவாக அரசு செயல்பட்டு வருகிறது. 2000த்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாக திமுக அரசு உள்ளது.  ஐடி துறை வளர மனித வளங்கள் மிக முக்கியம். அதற்காகவே எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் உருவாக்கினேன். தொழில் சார்ந்த திறன்களை வளர்க்க நான் முதல்வன் திட்டம் பெரும் உதவியாக உள்ளது.


கடந்த ஓராண்டில்10,035 ஆசிரியர்கள் 34,267 மாணவர்கள் தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கான பயிற்சி பெற்றிருக்கின்றனர். இ சேவையை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்க தகவல் தொழில்நுட்பம் திறம்பட பயன்படுத்தப்படுகிறது. அரசு நினைத்து சேவைகளும் ஆன்லைனில் வழங்கப்பட வேண்டும். மக்களின் அலைச்சல், நேரம் மிச்சமாக வேண்டும். 2021ல் 14,927 ஆக இருந்த இ சேவை மையங்கள் 2024 முடிவில் 33,554 ஆக இருமடங்கு அதிகரித்துள்ளது. இனி மக்களுடைய எல்லா பயன்பாடும் டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும். முறைகேடு செய்ய நினைக்கிறவர்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். டிஜிட்டல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். அதற்கேற்ற தொழில்நுட்ப வடிவமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

news

ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!

news

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

கிரீடம் அணிந்த மொட்டுகள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

இமயமலையில் அவதரித்த.. தனித்துவ மலர்.. பிரம்ம கமலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்