சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவர் தினத்தையொட்டி போட்ட வாழ்த்துச் செய்திக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து டிவீட் போட்டுள்ளார்.
திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என் ரவி, காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளூர் தின நல்வாழ்த்துக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதல்வர் மு.க..ஸ்டாலின் ட்விட் போட்டுள்ளார். அந்த ட்விட்டில்,
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.
குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி.. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}