சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவர் தினத்தையொட்டி போட்ட வாழ்த்துச் செய்திக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து டிவீட் போட்டுள்ளார்.
திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என் ரவி, காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளூர் தின நல்வாழ்த்துக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதல்வர் மு.க..ஸ்டாலின் ட்விட் போட்டுள்ளார். அந்த ட்விட்டில்,
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.
குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி.. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}