சென்னை: தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு சுதந்திர விழா கொண்டாட்டத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வாங்கி பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் பி.பார்ம், டி ஃபார்ம் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும்,ஏழை எளிய மக்கள் 20 முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகளைப் பெறவும் இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை தியாகராயர் நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 18, தொழில்முனைவோர் வாயிலாக 15 என மொத்தம் 33 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகின்றன.
அதேபோன்று, அதிகபட்சமாக மதுரையில் 52 இடங்களிலும், கடலூரில் 49 இடங்களிலும், கோவையில் 42 இடங்களிலும், தஞ்சாவூரில் 40 இடங்களிலும் என மொத்தம் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசின் மருந்தகத்தை விட 20 சதவீதம் குறைந்த விலைக்கு மருந்துகளை வாங்கி கொள்ளலாம் எனவும், சித்தா, ஜெனிரிக், ஆயுர்வேதம், யுனானி, சர்ஜிக்கல் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
{{comments.comment}}