சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட டிவீட் பரபரப்பாக பேசப்படுகிறது. நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என்பதுதான் முதல்வர் போட்ட அந்த சஸ்பென்ஸ் ட்வீட்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை, மதுரையில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார். மேலும் இரும்பின் தொன்மை என்ற நூலையும் அவர் வெளியிடவுள்ளார். கீழடி இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வுகள் குறித்த டிவீட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார். அதை ரீடிவீட் செய்து முதல்வர் போட்ட டிவீட்டில், நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த முக்கிய அறிவிப்பு என்ன என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் கிளம்பியுள்ளது. வழக்கம் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கணிப்புகளை முதல்வரின் டிவீட்டிலேயே போட்டு வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் தொகையை ரூ. 1500 ஆக அதிகரிக்கப் போகிறார் முதல்வர். அதுகுறித்த அறிவிப்புதான் நாளை வெளியாகப் போகிறது என்று சிலர் கணித்துள்ளனர். சிலர் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிடுவாரா என்ற குசும்புத்தனமான கேள்வியையும் கேட்டுள்ளனர்.
எது எப்படியோ நாளை வரை பொறுத்திருப்போமே.. எப்படியும் நல்ல விஷயமாகத்தான் இருக்கும். பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}