அமைச்சரவை கூட்டத்தில்.. எளிய மக்களின்.. 63 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு.. முதல்வர் பெருமிதம்!

Feb 11, 2025,11:29 AM IST

சென்னை: புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 86,000 மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ள முதல்வர் மு க ஸ்டாலின், ஏழை எளிய மக்களின் 63 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர்  பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.


2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று  அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,மூத்த அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தங்கம் தென்னரசு உள்ளிட்ட அனைத்து  அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.


சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு  முதல்வர் இன்றைக்கு ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறார் என கூறியுள்ளார்.




இந்த நிலையில் ஏழை எளிய மக்களின் 63 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களின் பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 29,187 பேருக்கும், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் வசிக்கும் 57,084 பேருக்கும் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  


6 மாதங்களில் பட்டா வழங்குவதற்கான பணிகளை செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்.

திமுக  அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்