சென்னை:பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றி கூறி வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 90 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை!
விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.
தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.
இந்தியாவுடனான மோதலை.. மதப் பிரச்சினையாக்க முயன்ற பாகிஸ்தான்.. நோஸ்கட் கொடுத்த மலேசியா
உங்க கனவை RCB நிறைவேத்திருச்சு.. SBI கனவை நீங்க நிறைவேத்துங்க.. மல்லையாவுக்கு நூதன கோரிக்கை!
IPL 2025 Final பெங்களுரு அணி த்ரில் வெற்றி...முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி
IPL 2025 Final...விராத் அவுட்...கை நழுவி போன சாதனை...ரசிகர்கள் ஏமாற்றம்
கமல்ஹாசன் தவறாக பேசவில்லை... மன்னிப்பு கேட்க கூடாது: நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்!
தேதிமுகவை அழைக்கும் காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் இணைந்தால் பலன் உண்டா.. முதல்ல இடம் இருக்கா?
கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் தள்ளி வைப்பு.. ராஜ்கமல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
ஒரே நாளில் 8 பேர் படுகொலை.. மது, கஞ்சா தான் காரணம்.. அரசிற்கு அக்கறை இல்லை: டாக்டர் அன்புமணி காட்டம்
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயராது: அமைச்சர் சிவசங்கர்
{{comments.comment}}