சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதையடுத்து சென்னையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்படடுள்ளன. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட அசவுகரியங்கள் இருந்தாலும் கூட மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்தப் பணிகளை மக்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் முக்கியமான மூன்று போக்குவரத்து மாற்றத்தை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்ரோ பணிகளை முன்னிட்டு 7ம் தேதி முதல் கீழ்க்கண்ட மார்க்கத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும்.
பாதை 1 - ராயப்பேட்டை ஹை ரோடு (அஜந்தா சந்திப்பு ஆர்.கே மடம் சாலை முதல் ராயப்பேட்டை ஹைரோடு வரை)
பாதை 2 - ராமகிருஷ்ணா மடம் சாலை (லஸ் ஜங்ஷன் முதல் திருமயிலை ரயில் நிலையம் வரை)
பாதை 3 - ராமகிருஷ்ணா மடம் சாலை (திருவெங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை)
இதற்குப் பதிலாக மாற்று போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள், வாகனதாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிஎம்ஆர்எல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. மெட்ரோ பணிகள் சிரமமில்லாமல் நடைபெறுவதற்காகவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் முடியும் வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்யப்பட்டுள்ள மாற்றுப் போக்குவரத்து வழிகள் தொடர்பான விளக்கமான தகவல்களையும் மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}