கைதிகளை நல்வழிப்படுத்த..  சூப்பர் திட்டம்.. திருக்குறள் வாசிங்க!

Sep 09, 2023,04:08 PM IST
கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக தினமும் குறள் கூறும் பொருள் என்ற தலைப்பில் திருக்குறள் வாசிக்கப்படுகிறது.

கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படி சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் திருக்குறள் வாசிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் சட்டம் தடுப்பு பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு தினசரி கற்பித்தல், நூலகம் மூலம் வாசித்தல் பயிற்சி யோகா மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.

இதன் அடுத்த கட்டமாக சிறை வளாகத்தில் தினமும் ஒரு திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  தினமும் காலை 7 மணிக்கு ஒரு கைதி மூலம் ஒரு திருக்குறள் வாசிக்கப்படுகிறது. அதற்குரிய பொருளையும் அந்த கைதி கூறுவார். சிறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள மைக்கில் திருக்குறளை வாசிப்பர். ஒவ்வொரு பிரிவிலும் மைக் உள்ளது. குறள் கூறும் பொருள் என்ற திட்டம் இந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்