கைதிகளை நல்வழிப்படுத்த..  சூப்பர் திட்டம்.. திருக்குறள் வாசிங்க!

Sep 09, 2023,04:08 PM IST
கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக தினமும் குறள் கூறும் பொருள் என்ற தலைப்பில் திருக்குறள் வாசிக்கப்படுகிறது.

கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படி சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் திருக்குறள் வாசிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் சட்டம் தடுப்பு பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு தினசரி கற்பித்தல், நூலகம் மூலம் வாசித்தல் பயிற்சி யோகா மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.

இதன் அடுத்த கட்டமாக சிறை வளாகத்தில் தினமும் ஒரு திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  தினமும் காலை 7 மணிக்கு ஒரு கைதி மூலம் ஒரு திருக்குறள் வாசிக்கப்படுகிறது. அதற்குரிய பொருளையும் அந்த கைதி கூறுவார். சிறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள மைக்கில் திருக்குறளை வாசிப்பர். ஒவ்வொரு பிரிவிலும் மைக் உள்ளது. குறள் கூறும் பொருள் என்ற திட்டம் இந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

அதிகம் பார்க்கும் செய்திகள்