ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

Nov 22, 2024,06:56 PM IST

கோயம்பத்தூர்: கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ள செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகிய வண்ணம் உள்ளனர். முதலில் சிறிதாக இருந்த விலகலானது இப்போது அதிகமாகி வருகிறது. கட்சியின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தேவேந்திரன், மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி, கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த புகழேந்தி மாறன் என பலரும் விலகியுள்ளனர்.



இந்த நிலையில் தற்போது கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் அபிராமி உள்ளிட்டோர் அடங்கிய நிர்வாகிகள் கட்சி தடம் மாறிப் போவதாக குற்றம் சாட்டினர்.  

ராமச்சந்திரன் பேசுகையில், கட்சியின் கொள்கைக்கு புறம்பான வகையில் சீமானின் செயல்பாடுகள் உள்ளன. யாருடைய கருத்துக்களையும் கேட்க சீமான் தயாராக இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால் விருப்பமிருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் போய் விடுங்கள் என்று பேசுகிறார். மேலும் அருந்ததியினர் இனத்தவரை வந்தேறிகள் என்று அவர் சொல்வது எங்களைக் காயப்படுத்துவதாக உள்ளது.  இது ஏற்கத்தக்க பேச்சு கிடையாது.  அவருடைய பேச்சுக்கள் மக்களிடமிருந்து கட்சியினரை அந்நியப்படுத்துவதாகவே உள்ளது. இந்த அதிருப்தியால்தான் விலகியுள்ளோம். அடுத்து எங்கு செல்வது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறினார் ராமச்சந்திரன்.

நேற்றுதான் நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென அவரது வீட்டுக்குப் போய் சந்தித்தார் சீமான். அப்போது அரசியலும் பேசினோம் என்று கூறியுள்ளார் சீமான். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தபோது கடுமையாக எதிர்த்தவர் சீமான். அவரது கட்சியினரும் கூட கடுமையாக எதிர்வினையாற்றி வந்தனர். ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் எழுதவும் செய்தனர். இந்த நிலைியல் ரஜினியை சீமான் வீடு தேடிப் போய் பார்த்தது அக்கட்சியினருக்கே வித்தியாசமான உணர்வைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியைப் பார்த்து விட்டு வந்த அடுத்த நாளே கோவை வடக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகியிருப்பது சலசலப்பை அதிகரிப்பதாக உள்ளது.

கட்சியினர் விலகல் குறித்து சீமான் இதுவரை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் படு வேகமாக கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் விலகலை சீமான் சாதாரணமாக எடுத்துக் கொள்வது சரியாக இருக்குமா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்