ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

Nov 22, 2024,06:56 PM IST

கோயம்பத்தூர்: கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ள செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகிய வண்ணம் உள்ளனர். முதலில் சிறிதாக இருந்த விலகலானது இப்போது அதிகமாகி வருகிறது. கட்சியின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தேவேந்திரன், மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி, கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த புகழேந்தி மாறன் என பலரும் விலகியுள்ளனர்.



இந்த நிலையில் தற்போது கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் அபிராமி உள்ளிட்டோர் அடங்கிய நிர்வாகிகள் கட்சி தடம் மாறிப் போவதாக குற்றம் சாட்டினர்.  

ராமச்சந்திரன் பேசுகையில், கட்சியின் கொள்கைக்கு புறம்பான வகையில் சீமானின் செயல்பாடுகள் உள்ளன. யாருடைய கருத்துக்களையும் கேட்க சீமான் தயாராக இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால் விருப்பமிருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் போய் விடுங்கள் என்று பேசுகிறார். மேலும் அருந்ததியினர் இனத்தவரை வந்தேறிகள் என்று அவர் சொல்வது எங்களைக் காயப்படுத்துவதாக உள்ளது.  இது ஏற்கத்தக்க பேச்சு கிடையாது.  அவருடைய பேச்சுக்கள் மக்களிடமிருந்து கட்சியினரை அந்நியப்படுத்துவதாகவே உள்ளது. இந்த அதிருப்தியால்தான் விலகியுள்ளோம். அடுத்து எங்கு செல்வது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறினார் ராமச்சந்திரன்.

நேற்றுதான் நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென அவரது வீட்டுக்குப் போய் சந்தித்தார் சீமான். அப்போது அரசியலும் பேசினோம் என்று கூறியுள்ளார் சீமான். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தபோது கடுமையாக எதிர்த்தவர் சீமான். அவரது கட்சியினரும் கூட கடுமையாக எதிர்வினையாற்றி வந்தனர். ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் எழுதவும் செய்தனர். இந்த நிலைியல் ரஜினியை சீமான் வீடு தேடிப் போய் பார்த்தது அக்கட்சியினருக்கே வித்தியாசமான உணர்வைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியைப் பார்த்து விட்டு வந்த அடுத்த நாளே கோவை வடக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகியிருப்பது சலசலப்பை அதிகரிப்பதாக உள்ளது.

கட்சியினர் விலகல் குறித்து சீமான் இதுவரை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் படு வேகமாக கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் விலகலை சீமான் சாதாரணமாக எடுத்துக் கொள்வது சரியாக இருக்குமா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மிரட்டிய இங்கிலாந்து.. இளம் புயல் ஜேக்கப் பெத்தேலின் சதம்.. வீணானது.. பைனலில் இந்தியா!

news

இந்தியாவின் தெறி ஆட்டம்.. இறுதிப் போட்டிக்குப் போக .. இங்கிலாந்துக்குத் தேவை 254 ரன்கள்!

news

Sanju Samson: மும்பை அரையிறுதியில் சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம்.. அந்த அரபிக் கடலே அதிர்ந்து போச்சு!

news

இவர்கள் பிரிந்து விட மாட்டார்களா என ஏங்கிய எதிரிகளின் கனவு தூளானது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

news

நிதீஷ் குமார் நிலை இபிஎஸ்-க்கு வந்து விடக் கூடாது... மாணிக்கம் தாகூர் அக்கறை

news

Nitish Kumar: பாஜக.,வேலையே இது தான்...நான் அப்பவே சொன்னேன்...தேஜஸ்வி ஆதங்கம்

news

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் கோலாகலம்: பிரபலங்கள் பங்கேற்பு!

news

தமிழகத்திலும் பீகார் பார்முலா... பாஜக மீது விசிக வன்னி அரசு விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்