- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
நாரண ஹரி ஹரி
நரஹரி ஹரி ஹரி
ஆனந்த ஹரி ஹரி
பத்மா பிரிய ஹரி
கேசவ ஹரி ஹரி
கேசிஹா ஹரி ஹரி
ஸ்ரீ ராம ஹரி ஹரி
சீதாராம ஹரி ஹரி

கோவிந்த ஹரி ஹரி
கோபால ஹரி ஹரி
கதி நீயே ஹரி ஹரி
பரமாத்ம ஹரி ஹரி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்
மண் உன்னும் மழலையில் மகிழ்கிறேன்
சல்லென சகடனை உதைத்த திருவடியில் திகழ்கிறேன்
பாலருந்தி பூதனையை மாய்த்த
மாதவனை மனதிலே தொழுகிறேனடா
நல்நாகம் மீதேறி ஆடிய நடனத்தில் நெகிழ்கிறேன் நாராயணா!
தசரதன் மகனே இராமா
தாரகமே உன் நாமா
தவமின்றி இராமநாமம் உரைத்து உரைத்து
உய்ந்தவர்களுண்டு உலகிலுன் பதமடைந்தவர்களே
பாதகங்களகன்றே பணிந்தேத்தினார்களே பரந்தாமா
பாமரர்களின் ஆபத்தாண்டாவா பல்லாண்டு பல்லாண்டு
ஆலினிலையில் அனாயசமாய்
ஆழிமழையில் நியே
ஆண்டாளின் அமுதனே
ஆழியேந்தி மிளிரும் மின்னலே
ஆலங்கட்டி கருணைபொழியும்
ஆராவமுதனே
ஆலவட்டம் விரும்பும் வரதனே
ஆலிங்கனம்தான் அனுமனுடன்
ஆனந்தவல்லி நாயகனே
மங்களம் மங்களம்
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}