- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
நாரண ஹரி ஹரி
நரஹரி ஹரி ஹரி
ஆனந்த ஹரி ஹரி
பத்மா பிரிய ஹரி
கேசவ ஹரி ஹரி
கேசிஹா ஹரி ஹரி
ஸ்ரீ ராம ஹரி ஹரி
சீதாராம ஹரி ஹரி

கோவிந்த ஹரி ஹரி
கோபால ஹரி ஹரி
கதி நீயே ஹரி ஹரி
பரமாத்ம ஹரி ஹரி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்
மண் உன்னும் மழலையில் மகிழ்கிறேன்
சல்லென சகடனை உதைத்த திருவடியில் திகழ்கிறேன்
பாலருந்தி பூதனையை மாய்த்த
மாதவனை மனதிலே தொழுகிறேனடா
நல்நாகம் மீதேறி ஆடிய நடனத்தில் நெகிழ்கிறேன் நாராயணா!
தசரதன் மகனே இராமா
தாரகமே உன் நாமா
தவமின்றி இராமநாமம் உரைத்து உரைத்து
உய்ந்தவர்களுண்டு உலகிலுன் பதமடைந்தவர்களே
பாதகங்களகன்றே பணிந்தேத்தினார்களே பரந்தாமா
பாமரர்களின் ஆபத்தாண்டாவா பல்லாண்டு பல்லாண்டு
ஆலினிலையில் அனாயசமாய்
ஆழிமழையில் நியே
ஆண்டாளின் அமுதனே
ஆழியேந்தி மிளிரும் மின்னலே
ஆலங்கட்டி கருணைபொழியும்
ஆராவமுதனே
ஆலவட்டம் விரும்பும் வரதனே
ஆலிங்கனம்தான் அனுமனுடன்
ஆனந்தவல்லி நாயகனே
மங்களம் மங்களம்
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
{{comments.comment}}