நாகப்பட்டனம் (தனி) வை.செல்வராஜ், திருப்பூரில் கே. சுப்பராயன்.. சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு!

Mar 18, 2024,08:10 PM IST

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் கே.சுப்பராயன், நாகப்பட்டனம் தனி தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுவார் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.


திமுக  கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டனம் (தனி) மற்றும் திருப்பூர் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று கட்சி தலைமை அறிவித்தது. சென்னை தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  மாநில செயலாளர் முத்தரசன், அகில இந்திய செயலாளர் நாராயணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 




இதில் நாகப்பட்டனத்தில் வை செல்வராஜை நிறுத்துவது என்றும், திருப்பூரில் மீண்டும் சுப்பராயனே போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 


ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுரையில் மீண்டும் சு. வெங்கடேசன் எம்.பியும், திண்டுக்கல்லில் சச்சிதாந்தனும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் சார்பில் தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்