நாகப்பட்டனம் (தனி) வை.செல்வராஜ், திருப்பூரில் கே. சுப்பராயன்.. சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு!

Mar 18, 2024,08:10 PM IST

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் கே.சுப்பராயன், நாகப்பட்டனம் தனி தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுவார் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.


திமுக  கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டனம் (தனி) மற்றும் திருப்பூர் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று கட்சி தலைமை அறிவித்தது. சென்னை தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  மாநில செயலாளர் முத்தரசன், அகில இந்திய செயலாளர் நாராயணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 




இதில் நாகப்பட்டனத்தில் வை செல்வராஜை நிறுத்துவது என்றும், திருப்பூரில் மீண்டும் சுப்பராயனே போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 


ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுரையில் மீண்டும் சு. வெங்கடேசன் எம்.பியும், திண்டுக்கல்லில் சச்சிதாந்தனும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் சார்பில் தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

அதிகம் பார்க்கும் செய்திகள்