சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் கே.சுப்பராயன், நாகப்பட்டனம் தனி தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுவார் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டனம் (தனி) மற்றும் திருப்பூர் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று கட்சி தலைமை அறிவித்தது. சென்னை தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன், அகில இந்திய செயலாளர் நாராயணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நாகப்பட்டனத்தில் வை செல்வராஜை நிறுத்துவது என்றும், திருப்பூரில் மீண்டும் சுப்பராயனே போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுரையில் மீண்டும் சு. வெங்கடேசன் எம்.பியும், திண்டுக்கல்லில் சச்சிதாந்தனும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் சார்பில் தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}