சென்னை: நடிகை குஷ்பு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது. தலித் மக்கள் பேசும் மொழியை தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுபடுத்தி பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கட்சி இன்று மாலை 5 மணி வரை கெடு விதித்துள்ளது. இதையடுத்து குஷ்பு வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மன்சூர் அலிகானுக்கு அடுத்து சர்ச்சை பேச்சில் சிக்கியுள்ளார் குஷ்பு. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மற்றும் நடிகையுமான குஷ்பு, மன்சூர் அலிகான் குறித்து பேசப் போய் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சில் சிக்கினார். மன்சூர் அலிகானுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல குஷ்புவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பலரும் குஷ்புவுக்கு பதில் கொடுத்தனர். குறிப்பாக மணிப்பூர் விவகாரத்தில் குஷ்பு எங்கே போனார், அனிதா மரணத்தின்போது எங்கே போனார்.. என்றெல்லாம் அவர்கள் கேட்டனர். இதையடுத்து உங்களது "சேரி பாஷை"க்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது என்று கூறியிருந்தார் குஷ்பு.

இது கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. குஷ்புவின் "சேரி" வார்த்தை பிரயோகத்திற்கு இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், விடுதலைச் சிறுத்தைகள், பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இவர்களில் ஒரு படி மேலே போன காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறை குஷ்பு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் லட்சம் பேரைத் திரட்டி குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்தது.
அவர்களது கெடு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குஷ்பு வீட்டின் முன்பு பெருமளவிலானோர் திரண்டு போராட்டம் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது குஷ்பு வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏராளமான போலீஸார் அந்தத் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
குஷ்பு மீது போலீஸில் புகார்

இதற்கிடையே, குஷ்பு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விசிக துறைமுகம் தொகுதி அமைப்பாளர் கார்த்திக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் சேரி மொழியில் பேசத் தெரியாது என்று சொல்லி பதிவிட்டது என்னையும் நான் சார்ந்திருக்கின்ற தலித் மக்களையும் காயப்படுத்தியுள்ளது.
2000 ஆண்டு காலமாக எமது மக்கள் குடியிருந்து வரும் பகுதியில் பேசுகின்ற மொழியை கேவலப்படுத்தி உள்ளார். மிகுந்த மனஉளச்சலுக்கும் மனவேதனைக்கும் எனக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் சேரியில் பேசுகின்ற மொழி வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்டத்தகாத மொழி என்றும் பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குஷ்பு மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மன்சூர் அலிகான் பரபரப்பு ஓய்ந்த நிலையில் தற்போது குஷ்பு பரபரப்பு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}