கொல்கத்தா: காங்கிரஸ் கட்சி 300 சீட்டுகள் வரை லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம். மீதமுள்ள தொகுதிகளை பிற கூட்டணிக் கட்சிகளுக்கு அது கொடுக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி இதில் பிடிவாதம் காட்டி வருகிறது என்று திரினமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு சமீபத்தில்தான் மல்லிகார்ஜூன கார்கே தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது தொகுதிப் பங்கீட்டு பேச்சுக்கள் அங்கு நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாநிலமாக தொகுதிப் பங்கீட்டை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டு இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் சில முக்கியக் கட்சிகளுக்கும், காங்கிரஸுக்கும் இடையே, தொகுதிப் பங்கீடு தொடர்பாக முட்டல் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக சமாஜ்வாடி, திரினமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தங்களது தனிப்பட்ட அஜென்டாவுடன் உள்ளதால் தொகுதிப் பங்கீடு சிக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மமதா பானர்ஜி காங்கிரஸ் குறித்து குறை கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த அனைத்து மத நல்லிணக்க பேரணியில் அவர் பேசுகையில், பிராந்திய கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாஜகவை வலுவாக எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் 300 இடங்கள் கூட போட்டி போட்டுக் கொள்ளட்டும். நான் கூட உதவி செய்கிறேன். அங்கு திரினமூல் காங்கிரஸ் போட்டியிடாது.
இந்தியா கூட்டணியின் கொள்கைக்கு புறம்பாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடந்து வருகிறது. என்னைப் போல யாரும் பாஜகவை நேரடியாக எதிர்ப்பதில்லை. சில பகுதிகளில் பிராந்தியக் கட்சிகள் வலுவாக உள்ளன. அங்கு அவர்களை தனியாக போட்டியிட வேண்டும். அப்போதுதான் வாக்குகளில் பாதிப்பு வராது, பாஜகவை வலுவாக தோற்கடிக்க முடியும்.
இதைச் செய்ய சில கட்சிகள் தயங்குகின்றன, யோசிக்கின்றன. இதுதான் பிரச்சினை என்று கூறியுள்ளார் மமதா பானர்ஜி.
நேற்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய பேரணி நடத்தப்படும் என்று மமதா பானர்ஜி அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்தப் பேரணி நேற்று கொல்கத்தாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}