சென்னை: தமிழ்நாட்டில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால்தான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வேட்பாளர் பட்டியல் இன்றைக்குள் வெளியாகும் எனவும், காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருப்பதால் கூட்டணி கட்சிகள் விறுவிறுப்பான முறையில் வேலையில் இறங்கி விட்டன. பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. பெரும்பாலான கட்சிகளின் வேட்பாளர்கள் 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதியிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதில் 21 தொகுதிகளில் களமிறங்க உள்ள திமுக அதன் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு, அடுத்த கட்டமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. ஏன் இந்த தாமதம் என பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் தர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாராம். இதனால் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் வேட்பாளர் பட்டியலை திருத்தி வருகின்றனராம். இதனால்தான் தாமதம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், கடந்த முறை போட்டியிட்டு வென்றவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}