சென்னை: தமிழ்நாட்டில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால்தான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வேட்பாளர் பட்டியல் இன்றைக்குள் வெளியாகும் எனவும், காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருப்பதால் கூட்டணி கட்சிகள் விறுவிறுப்பான முறையில் வேலையில் இறங்கி விட்டன. பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. பெரும்பாலான கட்சிகளின் வேட்பாளர்கள் 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதியிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதில் 21 தொகுதிகளில் களமிறங்க உள்ள திமுக அதன் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு, அடுத்த கட்டமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. ஏன் இந்த தாமதம் என பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் தர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாராம். இதனால் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் வேட்பாளர் பட்டியலை திருத்தி வருகின்றனராம். இதனால்தான் தாமதம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், கடந்த முறை போட்டியிட்டு வென்றவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}