காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்?.. இன்றாவது வெளியாகுமா.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

Mar 23, 2024,02:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டில்  புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால்தான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வேட்பாளர் பட்டியல் இன்றைக்குள் வெளியாகும் எனவும், காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருப்பதால் கூட்டணி கட்சிகள் விறுவிறுப்பான முறையில் வேலையில் இறங்கி விட்டன. பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. பெரும்பாலான கட்சிகளின் வேட்பாளர்கள் 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.  




திமுக கூட்டணியில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதியிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதில் 21 தொகுதிகளில்  களமிறங்க உள்ள திமுக அதன் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு, அடுத்த கட்டமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. ஏன் இந்த தாமதம் என பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.


தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் தர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாராம். இதனால் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் வேட்பாளர் பட்டியலை திருத்தி வருகின்றனராம். இதனால்தான் தாமதம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், கடந்த முறை போட்டியிட்டு வென்றவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்