சென்னை: திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் பத்து தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 என தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கட்சிகளின் செயல்பாடுகள் வேகம் பிடித்துள்ளன. திமுக கூட்டணி இன்று தனது தொகுதிப் பங்கீட்டை முழுமையாக முடித்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கான 9 தொகுதிகளையும் இன்று அறிவித்தது திமுக. இக்கூட்டணியில் திமுகவுக்கு 21 தொகுதியும், காங்கிரசுக்கு 10 தொகுதியும், முஸ்லீம் லீக், மதிமுக மற்றும் கொமதேக வுக்கு தலா ஒரு தொகுதியும், சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கபட்டுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ரூபாய் 500 கட்டணமாக செலுத்தி விருப்ப மனுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனு படிவங்களை பூர்த்தி செய்யப்பட்ட பின் புதன்கிழமை மதியம் ஒரு மணிக்குள் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற பொதுத் தொகுதிக்கு ரூபாய் 30,000, தனித் தொகுதி மற்றும் மகளிருக்கான தனித் தொகுதிக்கு ரூபாய் 15,000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கு ரூபாய் 10,000 , மகளிருக்கு ரூபாய் 5000 நன்கொடையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வங்கியில் காசோலையாக மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}