சென்னை: திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் பத்து தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 என தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கட்சிகளின் செயல்பாடுகள் வேகம் பிடித்துள்ளன. திமுக கூட்டணி இன்று தனது தொகுதிப் பங்கீட்டை முழுமையாக முடித்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கான 9 தொகுதிகளையும் இன்று அறிவித்தது திமுக. இக்கூட்டணியில் திமுகவுக்கு 21 தொகுதியும், காங்கிரசுக்கு 10 தொகுதியும், முஸ்லீம் லீக், மதிமுக மற்றும் கொமதேக வுக்கு தலா ஒரு தொகுதியும், சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கபட்டுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ரூபாய் 500 கட்டணமாக செலுத்தி விருப்ப மனுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனு படிவங்களை பூர்த்தி செய்யப்பட்ட பின் புதன்கிழமை மதியம் ஒரு மணிக்குள் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற பொதுத் தொகுதிக்கு ரூபாய் 30,000, தனித் தொகுதி மற்றும் மகளிருக்கான தனித் தொகுதிக்கு ரூபாய் 15,000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கு ரூபாய் 10,000 , மகளிருக்கு ரூபாய் 5000 நன்கொடையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வங்கியில் காசோலையாக மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}