காங்கிரஸ் தொகுதி சொல்லியாச்சு.. அடுத்து என்ன விருப்ப மனுதான்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாமாம்!

Mar 18, 2024,04:36 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் பத்து தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 என தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கட்சிகளின் செயல்பாடுகள் வேகம் பிடித்துள்ளன. திமுக கூட்டணி இன்று தனது தொகுதிப் பங்கீட்டை முழுமையாக முடித்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கான 9 தொகுதிகளையும் இன்று அறிவித்தது திமுக. இக்கூட்டணியில்  திமுகவுக்கு 21 தொகுதியும், காங்கிரசுக்கு 10 தொகுதியும், முஸ்லீம் லீக், மதிமுக மற்றும் கொமதேக வுக்கு தலா ஒரு  தொகுதியும், சிபிஐ,  சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.


திமுக கூட்டணியில், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கபட்டுள்ளன. 




இந்த நிலையில்  காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் சென்னை சத்தியமூர்த்தி பவனில்  ரூபாய் 500  கட்டணமாக செலுத்தி விருப்ப மனுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனு படிவங்களை பூர்த்தி செய்யப்பட்ட பின் புதன்கிழமை மதியம் ஒரு மணிக்குள் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற பொதுத் தொகுதிக்கு ரூபாய் 30,000, தனித் தொகுதி மற்றும் மகளிருக்கான தனித் தொகுதிக்கு ரூபாய் 15,000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 


அதேபோல் விளவங்கோடு  சட்டசபைத் தொகுதிக்கு ரூபாய் 10,000 , மகளிருக்கு ரூபாய் 5000 நன்கொடையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வங்கியில் காசோலையாக மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்