விளையாட்டுக் களத்திலிருந்து.. அனல் பறக்கும்.. தேர்தல் களத்திற்கு என்ட்ரி கொடுக்கும் வினேஷ் போகத்!

Sep 07, 2024,09:57 AM IST

சண்டிகர்: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஜூலானா சட்டமன்ற தொகுதியில் களமிறங்குகிறார்.


ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது.  அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது .ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றம் பஜ்ரங் புனியா இருவரும் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 


ஹரியானா சட்டசபை தேர்தலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் காங்கிரஸ் மற்ற கட்சிகளுடன் தீவிரமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.  இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக டெல்லி வீதிகளில் போராடிய மல்யுத்த  வீரர்களையும் தேர்தல் களத்தில் காங்கிரஸ் களம் இறக்குகிறது. 




பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.சி வேணுகோபால் முன்னிலையில் இணைந்தனர்.


காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு பஜ்ரங் புனியா பேசுகையில், அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். ஒவ்வொரு போராட்டத்திலும் காங்கிரசுடன் நிற்போம். மல்யுத்த வீராங்கனைகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பாஜக பெண் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியிருந்தோம். அவர்கள் யாரும் எங்களுடன் துணை நிற்கவில்லை. ஆனால், காங்கிரஸ் எல்லா இடங்களிலும் எங்களுடன் துணை நின்றது எனப் பேசி இருந்தார்.


அவரைத் தொடர்ந்து வினேஷ் போகத் பேசுகையில், காங்கிரசுக்கு நான் மிகுந்த நன்றி கூறுகிறேன். ஏனெனில் கஷ்ட காலங்களில் மட்டுமே நம்முடையவர் யார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட போது பாஜகவை தவிர அனைவரும் எங்களுடன் இருந்தார்கள். எங்கள் வலியையும் கண்ணீரையும் உங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்கும் ஒரு சித்தாந்தத்துடன் நான் இணைந்து இருப்பதில் பெருமைப்படுகிறேன். மேலும் அவர்களின் உரிமைகளுக்காக தெருவில் இருந்து பாராளுமன்றம் வரை போராட தயாராக இருக்கின்றேன் என்றார்.


காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியான அகில இந்திய கிசான் காங்கிரஸின் செயல் தலைவராக பஜ்ரங் புனியா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஹரியானா சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் 31 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். அதில் ஜூலானா சட்டசபைத் தொகுதியில் வினேஷ் போகத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹரியான மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கர்ஹி  சாம்ப்லா கிலோய் தொகுதியிலும், ஹரியானா காங்கிஸ் தலைவர் உதய் பன், ஹோடல் தொகுதியிலும்  போட்டியிடுகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்