சென்னை: சரக்கு திரைப்பட இசைவெளியீட்டு விழாவின் போது விழாவைத் தொகுத்து வழங்கிய பெண்ணுக்கு கழுத்தில் மாலை போட்டு அநாகரீகமாக நடந்து கொண்டார் கமெடி நடிகர் கூல் சுரேஷ். இதற்கு கடும் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார் கூல் சுரேஷ்.
மன்சூர் அலிகான் தயாரித்து நடித்துள்ள படம்தான் சரக்கு. சரக்கு திரைபடத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த படத்தில் மன்சூர் அலிகான் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். ஜெயக்குமார் ஜே என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் கலந்து கொண்டார். அப்போது ஏடாகூடமான காமெடி நடிகர் கூல் சுரேஷும் கலந்து கொண்டார். வழக்கம் போல பஞ்சாயத்தைக் கூட்டி விட்டார். தனது கழுத்தில் பெரிய ரோஜா மாலையைப் போட்டுக் கொண்டும், கையில் ஒரு மாலையைப் பிடித்தபடியும் வந்த கூல் சுரேஷ், எல்லோருக்கும் மாலை போடுகிறோமே இவருக்கு மாலையே போடலையே என்று கூறிக்கொண்டே அருகில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு திடீரென்று மாலையை போட்டுவிட்டார்.
எதிர்பாராத விதமாக நடந்த இச்சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் கடுப்பாகி மாலையைத் தூக்கி கீழே எறிந்தார். அந்த இடமே பரபரப்பானது. ஆனால் கொஞ்சம் கூட வெட்கமோ, இங்கிதமோ, உறுத்தலோ இல்லாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் கூல் சுரேஷ். அந்தப் பெண்ணைப் பார்த்து கோபமா என்று வேறு கேட்டார். அந்தப் பெண்ணோ கூல் சுரேஷைக் கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை.

ஆனால் இந்த சம்பவத்தை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பிரச்சினையாக எழுப்பினர். பொது இடத்தில் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷை எதற்காக இங்கெல்லாம் அழைக்கிறீர்கள்.. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கூல் சுரேஷை மன்னிப்பு கேட்குமாறு மன்சூர் அலிகான் உத்தரவிட அவரும் பூசி மெழுகி மன்னிப்பு கேட்டார். மன்சூர் அலிகானும் மன்னிப்பு கேட்டார்.
யார் இந்த கூல்
சாக்லெட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாவர் கூல் சுரேஷ். காக்க காக்க, தேவதையைக் காண்டேன் ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர்கள் சிங்கம் புலி மற்றும் சந்தானம் ஆகியோருடன் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார். படித்தவுடன் கிழித்து விடவும் திரைப்படத்தில் கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதுவே சுரேஷ் நாயகனாக நடித்த முதல் திரைப்படம் ஆகும்.

வெந்து தணிந்தது காடு படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய துவங்கிய நடிகர் கூல் சுரேஷ் பல படங்களுக்கு தியேட்டர் வாசலிலேயே நூதன முறையில் விமர்சனங்களை கொடுத்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், புதிய படங்களின் பார்க்க வரும் போது பல கெட்டப்புகளில் வந்து சர்ச்சையை எற்படுத்துவதும். பார்ப்பவர்கள் முகம் சுழிக்கு அளவுக்கு ஏடாகூடமாக ஏதையாவது செய்வதும் இவருடைய வழக்கம். இவர் குறித்த செய்திகள் மற்றும் செயல்கள் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன. கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}