பெய்ஜிங்: சீனாவில் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஒரு ஜோடி, அலுவலகத்தில் முத்தமிட்டுக்கொண்டதால் தங்களது வேலையை இழந்துள்ளனர்.
காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக்கொள்ளும் மெளனமொழியே முத்தம். காதலர் தினத்தின் ஒரு முன்னோட்டமாக, பிப்ரவரி 13ம் தேதி முத்த தினம் கொண்டாடப்படுகிறது. இப்படி முத்தம் கொடுப்பதற்கு என்று ஒரு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்படி அலுவலகத்தில் முத்தம் கொடுத்து அதற்காக வேலையை இழந்த ஜோடிகளும் உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம்.

சீனாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் லியூ மற்றும் சென் என்பவர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இதில் லியூ என்பவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது. லியூவும் சென்னும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததால் நட்பு உருவாகியுள்ளது. இவர்களின் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில், இருவரும் பணிபுரியும் இடத்திலேயே முத்தமிட்டு கொண்டு இருந்துள்ளனர். இது லியூவின் மனைவிக்கு தெரியவர. லியூவின் மனைவி முத்த ஆதாரங்களை மொத்தமாக சேகரித்து கணவரின் அலுவலக மேலதிகாரிகளுக்கு அனுப்பி விட்டார்.
இதனை அறிந்த அந்நிறுவனம், நிறுவனத்தின் விதிகளை மீறியதாக கூறி லியூ மற்றும் சென் இருவரையும் பணிநீக்கம் செய்தது. தங்களை வேலையை விட்டு நீக்கிய நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர் லியூவும், சென்னும். தனித்தனியாக சுமார் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றமோ, அலுவலகத்தில் முத்தமிட்டது விதிமுறைகளுக்குப் புறம்பானது, எனவே டிஸ்மிஸ் நடவடிக்கை சரியே என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து விட்டது.
முத்தம் கொடுக்கப் போய் இப்போது மொத்தமாக எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது இந்த ஜோடி!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}