பெய்ஜிங்: சீனாவில் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஒரு ஜோடி, அலுவலகத்தில் முத்தமிட்டுக்கொண்டதால் தங்களது வேலையை இழந்துள்ளனர்.
காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக்கொள்ளும் மெளனமொழியே முத்தம். காதலர் தினத்தின் ஒரு முன்னோட்டமாக, பிப்ரவரி 13ம் தேதி முத்த தினம் கொண்டாடப்படுகிறது. இப்படி முத்தம் கொடுப்பதற்கு என்று ஒரு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்படி அலுவலகத்தில் முத்தம் கொடுத்து அதற்காக வேலையை இழந்த ஜோடிகளும் உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சீனாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் லியூ மற்றும் சென் என்பவர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இதில் லியூ என்பவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது. லியூவும் சென்னும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததால் நட்பு உருவாகியுள்ளது. இவர்களின் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில், இருவரும் பணிபுரியும் இடத்திலேயே முத்தமிட்டு கொண்டு இருந்துள்ளனர். இது லியூவின் மனைவிக்கு தெரியவர. லியூவின் மனைவி முத்த ஆதாரங்களை மொத்தமாக சேகரித்து கணவரின் அலுவலக மேலதிகாரிகளுக்கு அனுப்பி விட்டார்.
இதனை அறிந்த அந்நிறுவனம், நிறுவனத்தின் விதிகளை மீறியதாக கூறி லியூ மற்றும் சென் இருவரையும் பணிநீக்கம் செய்தது. தங்களை வேலையை விட்டு நீக்கிய நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர் லியூவும், சென்னும். தனித்தனியாக சுமார் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றமோ, அலுவலகத்தில் முத்தமிட்டது விதிமுறைகளுக்குப் புறம்பானது, எனவே டிஸ்மிஸ் நடவடிக்கை சரியே என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து விட்டது.
முத்தம் கொடுக்கப் போய் இப்போது மொத்தமாக எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது இந்த ஜோடி!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}