புத்தாண்டு கொண்டாட போறீங்களா?.. மக்களே கவனம்.. மிரட்டும் கொரோனா.. எச்சரிக்கும் அரசு!

Dec 31, 2023,05:32 PM IST

டெல்லி : நாடு முழுவதும் ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.


இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 841 ஆக அதிகரித்துள்ளது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளதால் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000  ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 




இந்தியாவில் இதுவரை 4309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 312 பேர் குணமடைந்ததால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3997 ஆக குறைந்துள்ளது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அதிகமானவர்கள் ஒன்றாக கூடும் போது கொரோனா பாதிப்பு 5 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.


ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவிற்கு கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், பீகார், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.


டிசம்பர் 30 ம் தேதி கணக்கின் படி இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரசான ஜேஎன் 1 வைரசால் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 41 பேர் இந்த புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 36 பேரும், கர்நாடகாவில் 34 பேரும், கர்நாடகாவில் 9 பேரும், தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் ஒருவரும், தெலுங்கானாவில் 2 பேரும் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்