டெல்லி : நாடு முழுவதும் ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 841 ஆக அதிகரித்துள்ளது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளதால் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் இதுவரை 4309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 312 பேர் குணமடைந்ததால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3997 ஆக குறைந்துள்ளது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அதிகமானவர்கள் ஒன்றாக கூடும் போது கொரோனா பாதிப்பு 5 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவிற்கு கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், பீகார், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
டிசம்பர் 30 ம் தேதி கணக்கின் படி இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரசான ஜேஎன் 1 வைரசால் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 41 பேர் இந்த புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 36 பேரும், கர்நாடகாவில் 34 பேரும், கர்நாடகாவில் 9 பேரும், தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் ஒருவரும், தெலுங்கானாவில் 2 பேரும் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}