டெல்லி : நாடு முழுவதும் ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 841 ஆக அதிகரித்துள்ளது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளதால் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் இதுவரை 4309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 312 பேர் குணமடைந்ததால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3997 ஆக குறைந்துள்ளது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அதிகமானவர்கள் ஒன்றாக கூடும் போது கொரோனா பாதிப்பு 5 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவிற்கு கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், பீகார், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
டிசம்பர் 30 ம் தேதி கணக்கின் படி இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரசான ஜேஎன் 1 வைரசால் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 41 பேர் இந்த புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 36 பேரும், கர்நாடகாவில் 34 பேரும், கர்நாடகாவில் 9 பேரும், தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் ஒருவரும், தெலுங்கானாவில் 2 பேரும் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}