புத்தாண்டு கொண்டாட போறீங்களா?.. மக்களே கவனம்.. மிரட்டும் கொரோனா.. எச்சரிக்கும் அரசு!

Dec 31, 2023,05:32 PM IST

டெல்லி : நாடு முழுவதும் ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.


இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 841 ஆக அதிகரித்துள்ளது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளதால் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000  ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 




இந்தியாவில் இதுவரை 4309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 312 பேர் குணமடைந்ததால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3997 ஆக குறைந்துள்ளது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அதிகமானவர்கள் ஒன்றாக கூடும் போது கொரோனா பாதிப்பு 5 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.


ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவிற்கு கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், பீகார், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.


டிசம்பர் 30 ம் தேதி கணக்கின் படி இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரசான ஜேஎன் 1 வைரசால் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 41 பேர் இந்த புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 36 பேரும், கர்நாடகாவில் 34 பேரும், கர்நாடகாவில் 9 பேரும், தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் ஒருவரும், தெலுங்கானாவில் 2 பேரும் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!

news

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்