மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் கிடுகிடு உயர்வு.. 24 மணி நேரத்தில் 4 பேர் மரணம்

Apr 05, 2023,12:07 PM IST
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலனையில் இறங்கியுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. இது சற்று வேகமாக உள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது, மக்கள் பீதி அடைய வேண்டும் என்று அரசுகள் கூறினாலும் கூட, நிலைமையைப் பார்த்தால் சற்று அச்சமாகத்தான் உள்ளது. காரணம், தற்போது மரணங்கள் குறித்த தகவல்கள் அதிகரித்து வருகின்றன.



தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அடுத்தடுத்து மரணச் செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் மட்டும் 218 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 248 பேருக்குத்தான் கொரோனா கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 3792 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் மாக் டிரில் நடத்தப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் தானாஜி சவந்த் கூறியுள்ளார்.  மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சோலாப்பூர், சாங்கிலி, கோலாப்பூர், சிந்துதுர்க், புனே, சத்தாரா ஆகிய மாவட்டங்களில்தான் அதிக அளவிலான கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்