மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் கிடுகிடு உயர்வு.. 24 மணி நேரத்தில் 4 பேர் மரணம்

Apr 05, 2023,12:07 PM IST
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலனையில் இறங்கியுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. இது சற்று வேகமாக உள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது, மக்கள் பீதி அடைய வேண்டும் என்று அரசுகள் கூறினாலும் கூட, நிலைமையைப் பார்த்தால் சற்று அச்சமாகத்தான் உள்ளது. காரணம், தற்போது மரணங்கள் குறித்த தகவல்கள் அதிகரித்து வருகின்றன.



தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அடுத்தடுத்து மரணச் செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் மட்டும் 218 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 248 பேருக்குத்தான் கொரோனா கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 3792 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் மாக் டிரில் நடத்தப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் தானாஜி சவந்த் கூறியுள்ளார்.  மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சோலாப்பூர், சாங்கிலி, கோலாப்பூர், சிந்துதுர்க், புனே, சத்தாரா ஆகிய மாவட்டங்களில்தான் அதிக அளவிலான கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்