மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் கிடுகிடு உயர்வு.. 24 மணி நேரத்தில் 4 பேர் மரணம்

Apr 05, 2023,12:07 PM IST
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலனையில் இறங்கியுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. இது சற்று வேகமாக உள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது, மக்கள் பீதி அடைய வேண்டும் என்று அரசுகள் கூறினாலும் கூட, நிலைமையைப் பார்த்தால் சற்று அச்சமாகத்தான் உள்ளது. காரணம், தற்போது மரணங்கள் குறித்த தகவல்கள் அதிகரித்து வருகின்றன.



தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அடுத்தடுத்து மரணச் செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் மட்டும் 218 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 248 பேருக்குத்தான் கொரோனா கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 3792 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் மாக் டிரில் நடத்தப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் தானாஜி சவந்த் கூறியுள்ளார்.  மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சோலாப்பூர், சாங்கிலி, கோலாப்பூர், சிந்துதுர்க், புனே, சத்தாரா ஆகிய மாவட்டங்களில்தான் அதிக அளவிலான கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்