மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் கிடுகிடு உயர்வு.. 24 மணி நேரத்தில் 4 பேர் மரணம்

Apr 05, 2023,12:07 PM IST
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலனையில் இறங்கியுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. இது சற்று வேகமாக உள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது, மக்கள் பீதி அடைய வேண்டும் என்று அரசுகள் கூறினாலும் கூட, நிலைமையைப் பார்த்தால் சற்று அச்சமாகத்தான் உள்ளது. காரணம், தற்போது மரணங்கள் குறித்த தகவல்கள் அதிகரித்து வருகின்றன.



தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அடுத்தடுத்து மரணச் செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் மட்டும் 218 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 248 பேருக்குத்தான் கொரோனா கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 3792 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் மாக் டிரில் நடத்தப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் தானாஜி சவந்த் கூறியுள்ளார்.  மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சோலாப்பூர், சாங்கிலி, கோலாப்பூர், சிந்துதுர்க், புனே, சத்தாரா ஆகிய மாவட்டங்களில்தான் அதிக அளவிலான கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

news

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்