செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்

Sep 10, 2025,01:12 PM IST

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 12ம் தேதி பதவியேற்கிறார்.


நாட்டின்  துணை குடியரசு தலைவராக இருந்து ஜெகதீப் தன்கர் தனது பணியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து  புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் (68), இந்தியா கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் (79) வேட்பாளர்களாக போட்டியிட்டனர். 


துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் electoral college-ல் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் இடம்பெற்றனர். மேலும் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர்களும் electoral college-ல் இடம் பெற தகுதியுடையவர்கள். எனவே, அவர்களும் தேர்தலில் பங்கேற்றனர்.




இந்த நிலையில் காலை தொடங்கி நடைபெற்ற வாக்குப் பதிவு மாலையில் முடிவடைந்தது. இதையடுத்து 15வது துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலின் முடிவுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மொத்தம் 452 ஓட்டுக்கள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளரான பி.சுதர்சன ரெட்டி 300 ஓட்டுக்கள் பெற்று தோல்வியைச் சந்தித்தார்.


துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பாஜக தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை மறுநாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைக்கிறார். தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். அந்த பதிவியை அவர் ராஜினாமா செய்ய பின்னர், துணை ஜனாதிபதியாக பெறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்